கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இந்த நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞ்சர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழிக்கு பிறந்த்நாள் வாழ்த்து […]

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இது தவிர, இலங்கை தமிழர் மறுவாழ்வு […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மாந்திரீகம் செய்வதாக நம்ப வைத்து மருமகளை மாமியார் கழுத்தறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29) என்ற பெண், தனது முதல் கணவர் மறைவுக்கு பிறகு மரிய ரொசாரியோ என்ற பிசியோதெரபிஸ்ட்டை காதலித்து 2-வதாக திருமணம் செய்துகொண்டதே இந்த கொலைக்கு காரணமாக மாறியுள்ளது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத மாமியார் கிறிஸ்தோப்மேரி (55), தனது குடும்ப கௌரவம் […]

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் அட்டை […]

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பத்திரப்பதிவுப் பணிகள் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநிலப் பத்திரப்பதிவுத் துறையின் மைய தரவு சேமிப்பு வன்பொருளில் (Server Hardware) கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த முடக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைன் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்வது, வில்லங்கச்சான்றிதழ் பெறுவது மற்றும் சொத்துப் பரிமாற்ற பதிவுகள் […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் எடுத்து வரும் அதிரடி அரசியல் நகர்வுகள், திராவிடக் கட்சிகளின் கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியில் பங்கு” என விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் வீசிய அதிகாரப் பகிர்வு அஸ்திரம், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் முறையையே புரட்டிப் போட்டுள்ளது. தற்போது தவெக-வை நோக்கி திரும்பியுள்ள முக்கிய கவனிப்பு என்னவென்றால், […]

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 5,000 ரொக்கம் வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளை […]

திராவிட இயக்கத்தின் மூத்த தூண்களில் ஒருவரும், ‘மொழிப்போர் தளபதி’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் (92), வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்த இந்தத் செய்தி, திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல். கணேசன், பேரறிஞர் அண்ணா மற்றும் […]