திருமணத்திற்கு முன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு, பின்னர் அந்த உறவு முறிந்தால், அதை ‘திருமணம் செய்வதாக ஏமாற்றுதல்’ என்று கூறி கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான ஏமாற்றத்தை குற்றவியல் நடவடிக்கையாக மாற்றுவது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் என்றும் நீதிபதி புகழேந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கின் பின்னணி என்ன..? திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பட்டதாரிப் பெண், தன்னைத் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்த […]

அகவிலைப்படி என்பது விலையேற்றத்தால் ஊழியர்களின் வாங்கும் சக்தி குறைவதை ஈடு செய்யும் ஒரு பணப்பலன் ஆகும்.. மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது.. அந்த வகையில் மாநில அரசுகளும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்ந்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படி 58% உயர்த்தி […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் போடி நாயக்கானூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் உடன் […]