தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, தரமான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் […]

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வருகிற 02-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான […]

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், முதுமைக் காலத்தில் பொருளாதார வறுமையின்றி வாழும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500 மற்றும் மருத்துவப் படியாக ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் உண்டு. மேலும், உதவித்தொகை […]

பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு ஐ.ஐ.டி. சென்னை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு சென்னை ஐ.ஐ.டி.யின் மேலாண்மைதுறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. பணிபுரிவோர் இப்படிப்பில் சேரும் வகையில் மாற்று வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறும். 2 ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 2025 அக்டோபர் 19-ம் தேதி கடைசி நாளாகும். ஆர்வமுடையவர்கள் https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் […]

தொலைத்தொடர்புத் துறையில் சிம் கார்டு எண்ணை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் ‘போர்ட்டபிலிட்டி’ வசதி இருப்பது போல, இனி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தையும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. நுகர்வோர் தங்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இந்த வசதி வழிவகுக்கும். கடந்த 2013-14ஆம் ஆண்டுகளில் சோதனை முறையில், ஒரே நிறுவனத்திற்குள் விநியோகஸ்தரை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அதை விரிவுபடுத்தி, கேஸ் இணைப்பு […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் […]