நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் […]

வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால வைப்பு நிதி […]

சுபமுகூர்த்த தினமான இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது விஜய் நடத்திய தவெக மாநாட்டையும், விஜய்யையும், தவெகவினரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ நான் பதர்களுக்குள் நெல்மணியை தேடவில்லை.. என்னிடம் இருப்பது பதர்கள் இல்லை.. வீரியம்மிக்க நெல்மணிகள் தான் உள்ளன.. நான் வைத்திருப்பது விதை நெல்.. தவெகவில் இருப்பது எல்லாமே பதர்கள்.. மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை பார்க்காதீர்கள்.. பிப்ரவரி 4-ம் தேதி நான் ஒரு மாநாடு போடுவென். […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். இந்நிலையில், இந்த தம்பதி வசித்த வீட்டுக்கு எதிரில் இருந்த கோகுல் சந்தோஷ் என்ற இளைஞர், இரவில் அந்த தம்பதிகள் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜன்னல் வழியாக அவர்களை வீடியோ எடுத்து வந்துள்ளார். மேலும், அந்த ஆபாசக் காட்சிகளை தனது நண்பர் மற்றும் சித்த மருத்துவ நிபுணர் ஹரிஹரசுதனிடம் பகிர்ந்ததாக […]

மதுரையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் மாநில மாநாடு நடைபெற்றது. “முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என்ற வாசகம், மாநாட்டின் பேனரில் இடம்பெற்றிருந்தது. விஜய் அரசியலில் எவ்வாறு நிலைத்து நிற்கப் போகிறார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், பலர் ஜோதிடக் கணிப்புகளுக்கும் நம்பிக்கை செலுத்தத் தொடங்கியுள்ளனர். விஜய் கடக ராசி, பூச நட்சத்திரம் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் சுக்கிர திசையை அனுபவித்து வருகிறார். […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.75,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

தமிழ்நாட்டில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் “மகளிர் நன்னிலம் நில உடைமை” திட்டம். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணும் வாழ்வும் பிணைந்திருக்கும் கிராமப்புறங்களில் நிலம் என்பது சொத்தல்ல. அது குடும்பத்தின் […]

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். தற்போது, நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் தற்காலிகமானவையாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்களிக்க […]