மதுரை – தூத்துக்குடி தேசிய 4 வழிச்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரையில் இருந்து நேற்று மதியம் 2.35 மணியளவில் திருச்செந்தூர் நோக்கி 25 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த குளிர்சாதன அரசுப் பேருந்தானது, மாலை 4.30 மணியளவில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் வந்துள்ளது. பேருந்தை மதுரை பேரையூரைச் சேர்ந்த நல்லுசாமி (45) ஓட்டி வந்துள்ளார். பரமக்குடியைச் சேர்ந்த ஜெயராமன் (47) […]

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். […]

தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் […]

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் சமீபத்தில் பேசியிருந்தார்.. நடந்த சம்பவத்திற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் ஊடகங்களின் மனநிலை மாற வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கூட்டம் கூட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை என்றும் அவர் பேசியிருந்தார்.. இதையடுத்து அஜித் விஜய்க்கு ஆதரவளித்தாக விஜய் ரசிகர்களும், விஜய்யை விமர்சித்துள்ளார் என்று ஒரு தரப்பினரும் கூறி வந்தனர்.. இந்த நிலையில் […]

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அத்துமீறி நுழைந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய அந்த இளம் பெண், மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் திருமணம் ஆகாமல், பெற்றோர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். மகளின் பாதுகாப்புக்காக, கணவன்-மனைவி இருவரில் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]