விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான நடிகர் ரோபோ சங்கர், தனது மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பல ரியாலிட்டி ஷோக்களில் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களை போல மிமிக்ரி செய்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். 1997ஆம் ஆண்டு ‘தர்ம சக்கரம்’ படத்தில் அறிமுகமானாலும், நீண்ட இடைவெளிக்குப் பின் ‘தீபாவளி’ படத்தில் ரவி மோகனின் நண்பராக நடித்து கவனம் பெற்றார். […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி 8ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். பின்னர், திருப்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஒரு தனியார் மில்லில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு பணியாற்றிய 21 வயது இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் […]
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்று. இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 1.15 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், விடுபட்ட தகுதியான பெண்களையும் இத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சுமார் […]
நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தத இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற 2-வது மாநில மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து […]
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து […]
ஒருங்கிணைந்த குடிமைப் பணி (தொகுதி II மற்றும் IIA பணிகள்) தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11.2025, நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 […]
பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மரணம், மஞ்சள் காமாலை குறித்த விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, அது ஒரு தீவிர நோயின் அறிகுறியே என மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடலில் உள்ள பழைய ரத்த சிவப்பணுக்கள் சிதைவடையும்போது, அதிலிருந்து ‘பிலிருபின்’ என்ற கழிவுப் பொருள் உருவாகிறது. இது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள ரத்த […]
தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் துடிப்பான உடல்மொழியால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் ரோபோ சங்கர், தனது 46-வது வயதில் காலமானார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற ரோபோ சங்கர், ஒரு நடிகர், ஸ்டாண்ட்-அப் காமெடியன் மற்றும் நடன கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதில் ரோபோ போல வேடமிட்டு […]
தருமபுரி மாவட்டத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]

