தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதுடன், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தொடர்வதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே […]

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லி செட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 39 வயது வடமாநிலப் பெண் ஒருவருக்கு கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வந்த ரமேஷ்குமார் (34) என்ற ஓட்டுநருக்கும், அந்தப் பெண்ணுக்கும் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த ரமேஷ்குமாரின் மனைவி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, […]

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆகமப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத்தொகையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த ஊக்கத்தொகை உயர்வு, பாரம்பரியக் கலைகள் மற்றும் ஆகம விதிகளை கற்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊக்கத்தொகை விவரங்கள் : இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 18 பயிற்சிப் பள்ளிகள் (அர்ச்சகர், […]

தமிழகத்தில் உள்ள 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

ஆவண பதிவு தொடர்பாக கடந்த 2016 முதல் ஆகஸ்ட் 2025 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000 க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடந்திருந்தால் வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க பதிவுத்துறை ஐஜி உத்தரவு வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாகவே உள்ளது. இதில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளதால் அவற்றை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், […]

தமிழகத்தில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: ‘தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதையடுத்து,இதற்கான கட்டமைப்பு […]