தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை […]

தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களையும் அவருக்கு ஆதரவாக போராடியவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளு இந்த நிலையில் […]

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (41), நாகர்கோவிலில் இயங்கி வரும் ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனுஷா ஜாஸ்மின் (33), தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்கு வாழ்க்கையில், கடந்த சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. […]

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முருங்கப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரஹமதுல்லா (வயது 26) என்பவர் கார் விற்பனை முகவராக தொழில் செய்து வந்துள்ளார். அவரது மனைவி சஹானா (24) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சமீப காலமாக கூனிமேடு கிராமத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது, சஹானாவுக்கும் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் சாதிக் பாஷா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் […]

சென்னையில் தடை செய்யப்பட்ட பிட்புல் என்ற உயர் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (48). இவர், சமையல் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலையில் தனது வீட்டின் அருகே கருணாகரன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பூங்கொடி என்ற பெண், தனது வளர்ப்பு நாயான பிட்புல் ரக […]