நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட ‘தமிழக வெற்றிக் கழகம்’, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் கடுமையான உட்கட்சி பூசல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிலவிய அசாதாரண சூழல், கட்சியின் எதிர்கால ஒற்றுமை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட சில அதிரடி அறிவிப்புகள், பல மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் கனவில் இடியை பாய்ச்சியுள்ளது. இந்தக் […]

காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள் தான். வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மலர் சந்தைகள் இப்போதே ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களுக்கான தேவை உச்சத்தை தொடும் நிலையில், இத்தனை கோடி மலர்கள் எங்கிருந்து வருகின்றன? இது இறக்குமதியா அல்லது உள்நாட்டு உற்பத்தியா? என்ற கேள்வி எழுவது இயல்பு. உண்மை என்னவென்றால், ரோஜா உற்பத்தியில் இந்தியா ஒரு […]

சமீபத்தில், காகங்கள் மர்மமான முறையில் இறந்ததன் மூலம் சென்னையில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் கோவை என மொத்தம் 10 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பண்ணைகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக […]

தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அடிமை என்று முத்திரை குத்தும் திமுகவினர், உண்மையில் காங்கிரஸ் கட்சிக்குத் தங்களை அடகு வைத்துவிட்டு அடிமையாக செயல்படுவது யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர் சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகள் யாரும் ஆட்சியில் பங்கு கோரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக […]

மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் பிப்ரவரி 12, 2026, அதாவது இன்று நாடு தழுவிய பாரத் பந்த் நடத்துவதால், தமிழ்நாடு முழுவதும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்கங்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதைப் பொறுத்து தமிழ்நாட்டில் அதன் தாக்கம் மாவட்ட வாரியாக மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்த நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கு எதிர்ப்புத் […]

செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நடக்கும் திமுக வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் 5-ல் ஒரு பங்கு இருப்பவர்கள் திமுக வாக்குச்சாவடி முகவர்கள். சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளிலும் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சென்னையின் அடையாறு பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்து காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயிரிழந்த காகங்களின் உடல்கள் உடனடியாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர்தர விலங்கு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பரிசோதனையில், அந்த காகங்கள் ‘H5N1’ எனப்படும் அதிதீவிர பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. உள்ளே இருந்து சத்தமாகப் பேச்சுக்குரல்களும், கும்மாள சத்தமும் கேட்டதையடுத்து, பொதுமக்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட்டபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். சுமார் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் […]

நாடாளுமன்ற அரசியலில் இருந்து மெல்ல மாநில அரசியலுக்கு தனது கவனத்தை திருப்பி வரும் திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என தென் மண்டலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தென் மண்டல திமுகவினர் கனிமொழியின் தலைமையின்கீழ் ஓரணியில் திரண்டு வருகின்றனர். இந்த சூழலில், முதல்வரின் மருமகன் சபரீசனின் என்ட்ரி கனிமொழிக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கனிமொழி ஏற்கனவே கவனித்து வரும் அதே மாவட்டங்களில், சபரீசன் தனது குழுவினருடன் திடீர் […]