கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அருணன் ஆகியோரின் தாயார் தேவகி என்பவர் கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தியைக் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இருவரும் தங்கள் உறவினர்களுடன் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அஸ்தியைக் கரைத்த பின்னர், அனைவரும் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, அவர்களுடன் வந்த உறவினரான சீனிவாசன் (64) என்பவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று, […]

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, பிணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லை மத்திய சிறை என்பது தி.மு.க.வினருக்கு முக்தி தரும் இடம். சிறைச்சாலை என்பது எங்களுக்கு […]

காவிரி நீர் உரிமை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்ததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாமலும், மேகதாது அணை திட்டத்தை தடுக்க இயலாமலும் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கொந்தளிப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது உரையாற்றிய, […]

மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. முதல்வர் விஜய்யின் நெருங்கிய தோழியாகவும் அறியப்படுகிறார். சமீப காலமாகவே இவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தாத […]

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் புதிய ‘மில்க் ரஸ்க்’ விற்பனையை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் பால் வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சீராக விநியோகித்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக பால் மட்டுமின்றி பால்கோவா, பாதாம் […]

தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதிய செய்தி தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த மூத்த தலைவர்களான வைகைச்செல்வன், கலைராஜன், மகேந்திரன், புகழேந்தி மற்றும் அமெரிக்கை நாராயணன் ஆகியோருக்கு தவெகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார், விக்னேஸ்வரன், […]

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, காவிரி நதிநீர்ச் சிக்கல் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து சுமுகத் தீர்வு காண்பதற்காக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்திக்க தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழக அரசு […]

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மறுத்த ஆத்திரத்தில், 3 வயது பெண் குழந்தையை கொடூரமாக அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி (23) என்பவரின் மனைவி சுவாதி (22). இவர்களுக்கு விஷ்ணு பிரியா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. சுவாதி அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, […]

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருவதாகவும், முதல்வர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் என்பதால் தான் அவர் அமைதி காப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், முதல்வர் விஜய் எப்போது இது குறித்துப் பேசுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், இக்கூட்டம் தேவையில்லை எனக் கூறிய […]