சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று அதிகளவில் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
இந்தியாவில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வாழும் உரிமை, குடும்ப வாழ்வு, குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமைகள் LGBTQ+ தம்பதிகளுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA+ தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை நீதிபதிகள் GR சுவாமிநியாதன் மற்றும் V லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. இருப்பினும், திருமணம் என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி […]
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இது வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். […]
திருவாரூர் தியாகராஜர் கோவில்… இது ஒரு கோயிலல்ல, கோடியான ஆன்மீகங்களை கொண்ட பெருஞ்சமூகம். பெரிய கோவில் என்றால் நம் அனைவருக்கும் நினைவிற்கும் வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் சைவ மரபு படி பெரிய கோவில் என்பது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலை மட்டுமே குறிக்கும்.சைவ மரபுப் படி கோவில் என்பது சிதம்பரத்தையும், இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் என்றும் சொல்லப்படுகிறது. 365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், […]
சென்னை புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டம் நாளை (ஜூன் 06) நடைபெறுவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் […]
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கல்வி விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேல்முருகன் இருக்கும் இடம் தெரியாமல் போவது நிச்சயம் தவெகவின் இணை செயலாளரான தாஹிரா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10, 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்து, கல்வி விழாவில் பங்கேற்க செய்து, அவர்களைக் […]
ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர் ரவி மோகன். இவர் தந்தை மோகன் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல அவதாரம் எடுத்தவர். மேலும், ரவி மோகனின் அண்ணனும் ரவி மோகனை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால், சமீப காலமாக ரவி மோகனுக்கு படங்கள் எதுவும் செட் ஆகவில்லை. அதே நேரத்தில், அவரின் குடும்பப் பிரச்சனையும் வெடித்தது. ரவி மோகன் ஆர்த்தியை […]
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் அம்மாவாகவும், வடசென்னை மற்றும் அசுரன் படத்தில் தனுஷின் அம்மாவாகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மணிமேகலை. இவர், சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்து வருகிறார். படங்கள் இல்லாத சமயத்தில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான், இவர் வாங்கிய சொந்த காரை ஒருவன் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். […]
நடிகர் விஜய், எப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாரோ, அப்போதில் இருந்து அவரை சுற்றி பிரச்சனைகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. கட்சிப் பெயரில் தவறு, சின்னம் சர்ச்சை, அது வெற்றிக்கான பூவே கிடையாது என்று பல கருத்துகள் உலா வந்தன. ஆனால், அதையெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளாமல், தன்னுடைய அரசியல் பணியை தீவிரமாக செய்து வருகிறார். இதற்கிடையே, தவெக-வின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. இதற்கு […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு நேற்று (04.06.2025) முதல் தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் […]

