தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறி வருகின்றனர்.. குறிப்பாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் […]

தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண […]

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரையில் நடந்த 2-வது மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மக்களை சந்திக்க தயாராகி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருக்கும் விஜய், இதற்கான அனுமதியை பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திருச்சிக்கு வந்தார். அப்போது, அவரை வரவேற்க ஏராளமான […]

விருத்தாசலத்தில் சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் பாமக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கிருபை என்பவர், விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி சலீம் (28) ரூ.10 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் […]

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். விஜய் டிவியில் பெண் வேடமிட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் 2023-ஆம் ஆண்டு மரியாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தச் சூழலில்தான், ஒரு திருநங்கை நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். […]

தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில வட்டங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். இந்த விடுமுறை, அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். […]

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இணை மேம்பாட்டு ஆணையர் தலைமையிலான ஒப்புதல் குழு பிரிவு, எட்டு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்திசார் முதலீடுகள் தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT/ITES), உற்பத்தி, பொறியியல் மற்றும் தளவாடத் துறைகளில், சுமார் 800 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 3,500க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். தமிழ்நாட்டின் பொருளாதார […]