தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை, அவரின் தாயின் தந்தையான தாத்தா பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13.02.2024 அன்று புகாரளிக்கப்பட்டது. தனது 7 வயது மகளை, தனது தந்தை வைரவன் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை அவரது தாத்தாவை […]

டெல்லி பாஜகதான் வீடுகளை இடிக்கிறது என்றால், இங்குள்ள எங்கள் கூட்டணி கட்சி திமுகவும் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி மாநிலம் நிஜாமுதீன் ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் 3 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என டெல்லியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும் […]

இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்றவைகளே காரணம். இதற்கிடையே, அமெரிக்க […]

500 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூ.500 கொண்டு வரப்பட்டது. அதேபோல், ரூ.1,000 நோட்டுக்கு பதில் ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ரூ.2,000 நோட்டு மக்களிடம் புழக்கத்தில் இல்லை. அதை ரிசர்வ் வங்கி திரும்பப் […]

தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. நடன இயக்குனர் கௌரி சங்கரை தினேஷ் மாஸ்டர் அடித்ததாகவும் அவர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த டான்ஸ் யூனியன் சங்கமும் தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு சக நடன இயக்குனரை அடித்தது மிகப்பெரிய தவறு என்று குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை பெப்சி சங்கத்திடம் […]

இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் விதிமுறைகளின்படி தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு […]

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும். தமிழ்நாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் […]

குறைந்த வட்டி விகிதத்தில் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடன்திட்டத்தை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, சுய வேலைவாய்ப்பு […]

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூதாட்டி ஒருவர் பலி என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]