ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் உள்ள அவர், அதிமுகவுக்கு டாடா காட்டிவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டதாக […]

தேனியில் கடந்த 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு இடையே மோதல் சம்பவம், பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளைதொடங்கியுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம் மற்றும் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வரும் நிலையில், சேலம் – கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள மகுடஞ்சாவடியில் அக்கட்சியின் முக்கியப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கூட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறை மிக கடுமையான […]

சென்னை நீலாங்கரை கணேஷ் நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (40) என்பவர், ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சிலம்பம் பயின்று வருகின்றனர். தைப்பூச திருவிழாவையொட்டி ஈஞ்சம்பாக்கம் விநாயகர் கோயிலில் திருநாவுக்கரசு தலைமையில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி மட்டும் பேருந்துக்காக தனியாக காத்திருந்துள்ளார். இதைப் […]

தமிழகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் நாளை (பிப்ரவரி 9, திங்கட்கிழமை) போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சுமார் 3 மணி நேரம் மூடப்படும் என தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக, கடந்த 5 நாட்களாக […]

தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற விவாதம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டாலும், விக்கிரவாண்டி தொகுதியே அவரது முதல் தேர்வாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிரவாண்டியை தேர்வு செய்வது ஏன்..? தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த வி.சாலை மாநாடு நடைபெற்ற இடமே விக்கிரவாண்டி என்பதுதான் இதற்கு […]

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குறுதிப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் இரு தரப்பிலிருந்தும் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, மாணவர்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் கல்விக்கடன் சுமையை குறைக்கும் வகையில், […]

அதிமுகவை ஒருங்கிணைக்க கோரி வி.கே.சசிகலா, விடுத்த தொடர் அழைப்புகளை அக்கட்சித் தலைமை கண்டு கொள்ளாத நிலையில், தற்போது தனிப்பாதையில் பயணிப்பது தொடர்பாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். நீண்டகாலமாக அதிமுகவை மீட்கப் போராடி வந்த சசிகலா, தற்போது தனது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், “இனி காத்திருப்பதில் பயனில்லை, நேரடியாக களமிறங்குவதே சரி” என […]

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே கூலிப்படை ஏவிக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செந்தில்குமார், தனது மனைவி காவ்யாவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதை அறிந்தும், குடும்ப நலன் கருதி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காவ்யா வீட்டை விட்டு ஓடியபோது, பெரியோர்கள் முன்னிலையில் சமரசம் பேசி செந்தில்குமார் […]