பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் உள்ள மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை அமைந்துள்ளது. அதன் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலிகட்டியுள்ளார். தனது நண்பர்கள் பூ போட்டு […]

மழையின் அளவைப் பொறுத்து பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார் வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், […]

தமிழகத்தில் வருகின்ற 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, […]

இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக தமிழ்ப்பாட ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, 15-ம் தேதி […]

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நீலகிரி, தஞ்சை, திருவாரூர் , நாகப்பட்டினம்  ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.  கோவை , திருப்பூர் […]

வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார், அங்கிருந்த ஒரு வாலிபரையும், இரண்டு பெண்களையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் […]

9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர் (50). இவரது வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில், சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி அந்த […]

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படை உதவியுடன் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விஏகே நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் (42). இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்க நிலையில், இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆரணி […]

சென்னை – சேலம் சொகுசு பேருந்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பேஸ்புக் காதலன், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மாணவியை தினேஷ்குமார் நேரில் […]

தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி, 5-க்கும் மேற்பட்ட ஆண்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண், கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தீபன் (32). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். நீண்டகாலமாக பெண் கிடைக்காததால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தீபன் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தன்னை விட […]