பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று பெரம்பூர், ஆவடி, திருவேற்காடு பகுதிகளின் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் […]

தமிழகத்தில் அடுத்து வரும் 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தினசரி 500 என்று இருந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்டில் 481 பேர், செப்டம்பரில் 572 பேர் என […]

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், விருதுநகர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL-1/FL-2/FL-3/ FL-3A, FL-3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003ஆம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி […]

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; 2022-23- ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை […]

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். […]

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்புசார்ந்து வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள், மற்றும் சுற்றுச்சுவர் எதேனும் இருப்பின் அவற்றை […]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 பேரை கணவராக ஏற்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். வடிவேலு சினிமா பாணியில் 4 கணவரையும் ஒரே நேரத்தில் அழைத்து வைத்து பஞ்சாயத்து செய்தனர். ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த ஒருவர் மற்றும் கருப்பூர் பகுதி சேர்ந்த 2 டிரைவர்கள் மற்றும் ஆம்பூரை சேர்ந்த ஒரு டிரைவர் என 4 பேருடன் அடுத்தடுத்து குடும்பம் நடத்தி உள்ளார். […]

வேலையில்லாத இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,400 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்யியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது..வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.22 அன்றை தேதியில் 5 ஆண்டுகள் முடிவடைந்த முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு , […]

திருச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய பொறியியல் மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடுப்பதற்கான அவசர சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. […]

திருவள்ளூர் மாவட்டம்தோக்கமூர் என்ற கிராமத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தோக்காமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் புறம்போக்கு நிலத்தில் மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. இந்த சுவரின் மூலம் பட்டியலின் மக்கள் வசிக்கும் பகுதிகளும் சாலையும் பிரிக்கப்பட்டது. ஆடு மாடுகளை மேய்க்க சுற்றி சென்றுதான் […]