தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022-2023 ஆம்‌ ஆண்டுக்கான மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல்‌ மலம்‌ நியமனம்‌ வழங்கப்பட ஏதுவாக தற்காலிக தேர்ந்தோர்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கீழே இடம்‌ பெற்றுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ […]

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே “பொன்னியின் செல்வன் -1″திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்று மதுரையில் […]

ஓபிஎஸ் உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்ய அணிலைப் போல் செயல்படுவோம். காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் தான் உள்ளன. யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. […]

கோவையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் இரண்டாம் தேதி எந்த விதமான இறைச்சியையும் விற்பனை செய்ய கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை […]

11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக அவரது பெற்றோர் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை […]

புதையல் எடுக்க குழி தோண்டியவர், அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து வரும் லட்சுமணன், அவ்வப்போது புதையல் எடுப்பதாக கூறி புதையல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதையல் எடுக்க போவதாக […]

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள்‌ […]

திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவியை மருமகளாக கூறி, தனது மகனிடம் பேச சொல்லி தொல்லை கொடுத்த ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என அழைக்கும் […]

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கான தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2024இல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. அப்போது அதிமுக வெல்லும். ஆட்சி பொறுப்பேற்று 16 மாத காலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. கலைஞருக்கு […]

முதல் மனைவி வீட்டிற்கு சென்று வருவதைக் கேட்டு சண்டையிட்ட 2-வது மனைவியை தலையனை வைத்து அழுத்தியும் கரண்ட்ஷாக் கொடுத்தும் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஷாஜகான் (47). இவர் தோல் ஆடைகளைக் கொண்டு டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஜெபினா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் […]