இரவு வேலை எனக் கூறிவிட்டு பணிக்கு செல்லும் மனைவி, சந்தேகத்திற்கு இடமான சோர்வுடன் வீட்டிற்கு வருவதால் சந்தேகமடைந்த கணவர் கண்காணித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் கே.ஜி. சாவடியில் 30 வயதான பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் இரயில்வே ஊழியராக பணியாற்றுகிறார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த பெண் தனது கணவரிடம் ’நான் வேலைக்கு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். கணவரும் […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ஆசிரியையின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை […]
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 […]
படித்த வேலைவாய்ப்பற்ற நபர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை. இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு […]
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]
குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 பேர் தேர்வினை எழுதவில்லை. சுமார் 9,94,878 பேர் தேர்வு எழுதினர். அதாவது 84.44% […]
சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும் ( செவ்வாய்க்கிழமை), சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட […]
சேலம் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ் வளர்ச்சித் துறையின் 2021- 22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின்ஸபிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு […]
பங்குச்சந்தை ஏஜென்சி நடத்தி வந்த தொழிலதிபருக்கு 37 லட்சம் இழப்பு ஏற்பட்டதை அடுத்து முதலீடு பணத்தை திருப்பி தரமுடியாததால் அவரை கடத்திச் சென்று கையெழுத்து வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருபவர் 58 வயதான சீதாராமன். இவரது நண்பர் 50 வயதான நெல்லையப்பன் இவருடன் சேர்ந்து தனியார் பசை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2021ம் […]
சென்ட்ரல் , எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் ரயில்வே நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்கள் வருவதால் நடைமேடைகளில் கூட்டத்தை […]