செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி. இவருக்கு 70 வயதில் சுகுமார் என்ற மகனும், 68 வயதில் ராதா என்ற மகளும் உள்ளனர். சுகுமார் கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வருகிறார். கணவர் […]

நியாய விலைக்கடைகளில் உள்ள 4,000 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிமுறையின்படி 5 உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் ஆ்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு ஆட்சியரால் இந்த பணிக்கான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 4000 காலிப் பணியிடங்கள் உள்ளன. கட்டுநர், விற்பனையாளர் பணிக்கான இடங்களை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். […]

அமைச்சர் அன்பில் மேகேஷுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் , பன்றிக் காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. குழந்தைகளை ப்ளூ காய்ச்சல் தாக்கி வருகின்றது. தலைமைச் செயலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம்நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துசை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் […]

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, தஞ்சாவூர், […]

ரேஷன் கடைகளில் காலியாக உள்ல 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் சுமார் 33,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.. இந்த கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பகுதிகளில் 25,000 பேர் பணியாற்றி வருகின்றனர். எனினும் பணியாளர் பற்றாக்குறை, ஒரே நபர் 2 அல்லது 3 ரேஷன் கடைகளை கூடுதலாக கவனிக்கும் சூழல் நிலவுகிறது.. இதனால் ஊழியர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுளது.. இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை […]

தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை […]

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்பு. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க […]

பருவமழை நோய்களைக்‌ கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ காய்ச்சலுக்கான தனிச்‌ சிறப்பு வார்டுகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும்‌ பன்றிக்காய்ச்சல்‌ போன்ற தொற்று நோய்கள்‌ மற்றும்‌ சாதாரண சளி, காய்ச்சல்‌ போன்றவற்றை தடுக்கவும்‌, உரிய நேரத்தில்‌ கட்டுப்படுத்தவும்‌ மாவட்ட நிர்வாகம்‌ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகிறது. மேலும்‌ […]

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை போல மதுரையில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் 60 பெண்கள் குளித்ததை ஆண் நண்பருக்கு அனுப்பியதாக புகார் எழுந்ததை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதே போல மதுரையில் இளம் பெண் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் பிற பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பி வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் […]