திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் சாலை ஓரத்தில் செல்போன்கடையில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. 2 வருடமும் ஆல்பாஸ் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓரிரு தேர்வுகளிலும் மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அதை முதன்மை கல்வி அலுவலகர் , வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுத்து பின்னர் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு எழுத கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]

சென்னை வண்ணாரப்பேட்டையில் பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் , இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேருக்கு தண்டனை விதித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷகிதா பானு இவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உறவினர் பெண்ணான 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் […]

ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் மூலம் ரூ.79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷிற்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால், ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, பிளிப்கார்ட் (Flipkart) செயலியில் 79,064 ரூபாய் மதிப்பில் ட்ரோன் கேமரா ஒன்றை பார்த்து, கிரெடிட் கார்ட் மூலம் பணம் […]

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட ‘கட் அவுட்’ எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் […]

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழக்கும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்தது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டத்தை […]

தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த SSC – CGL தேர்வுக்குத்‌ தயாராகும்‌ தேர்வர்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக நடத்தப்படும்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஒன்றிய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ பி மற்றும்‌ குரூப்‌ சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை […]

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளிக்கல்வித்துறையில் ஜூன் 1ஆம் தேதி , மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர் […]

கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசி வருவதையடுத்து பெட்ரோலை கேன்களில் விற்பனை செய்யக்கூடது என்று மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, மதுரை , ராமநாதபுரம் , உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் , பாஜவினர். , நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு […]