அரசுப் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 8 மாணவிகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து புகார் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி, […]

இளம்பெண் ஒருவர் தனது 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் அப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பரமேஸ்வரி என்கிற பெண்ணுக்கும், அவரது கணவரான சுப்ரமணியன் என்பவருக்கும் குடும்பச் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் […]

எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும்,  சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உயர்‌ கல்வி பயில கல்விக்கடன்‌ பெறுவதற்கு மாணாக்கர்கள்‌ எவ்வித தயக்கமும்‌ இன்றி தங்களது வங்கி மேலாளரை அணுகி பயன்‌ பெறலாம்‌. இதுகுறித்துமாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம் தனது செய்தி குறிப்பில் மாணவ, மாணவிகள்‌ படிப்பதற்கு கல்விக்‌ கட்டணம்‌ ஒரு தடையாக இருக்கக்‌ கூடாது என்ற நோக்கில்‌ உயர்‌ கல்வியைத்‌ தொடர, கல்விக்‌ கடன்‌ முனைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வங்கிகள்‌ மூலமாக கல்விக்‌ கடனுக்கு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகிறது. அந்த […]

மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான […]

தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் மின்னிலயங்களை பராமரிக்கும் பணிக்காக அப்போது மின்தடை செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரம்பூரில் பெரியார் நகர் 1, […]

இது குறித்து முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெருமாள்சாமி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வித்துறை அறிவித்தது. இந்தப் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை 2,000ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் […]

அரசுப்பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதல்முறையாக 6-ம் […]

சென்னை நுங்கம்பாகத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஐ.டி. பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புழல்  சிறையில்அடைக்கப்பட்ட அந்த இளைஞர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம் குமார் உயிரிழப்பில் […]

ஜிப்மர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் , முறையான சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு புகார்கள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மீது தொடர்ந்து புகார்கள் எழுவதை அடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் பாராசிட்டாம்மால் மாத்திரை கூட இல்லையாமே , அதற்கும் தட்டுப்பாடு உள்ளதாமே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த […]