தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் கோடை காலமாகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வந்தது அதன் காரணமாகவே இந்த வருடம் கோடை காலம் என்பது கோடைகால சாயலே இல்லாமல் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பகல் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டினாலும் இரவு நேரங்களில் […]

இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்‌ அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டத்தில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை,சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, தருமபுரி, சேலம்‌, திருச்சி, தஞ்சை […]

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் தமிழக அரசியல் சரித்திரத்திலேயே 28 வயதில் மேயரானது இவர் மட்டும்தான். அதோடு சென்னையின் முதல் பெண் மேயர் என்ற பெயரையும் இவர் பெற்றார். அதோடு இவருக்கு அரசியல் அனுபவம் அவ்வளவாக இல்லை என்றாலும் மூத்த அமைச்சர்கள் பலர் இவர் அருகில் இருந்து இவரை வழிநடத்த தொடங்கினர். அதன் பிறகு […]

அரசுக்கு சொந்தமான மருத்துவமனை இதுபோன்ற மோசமான நிலையில் இருந்தால் எப்படி மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனைக்கு வருவார்கள் என்று சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர், தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு […]

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது. 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ எதிர் வரும்‌ 15.7.2024 அன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக்‌ கொண்டாட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகள்‌ வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌, கல்விக்கண்‌ […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற 08.07.2023 அன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார்(29) இவரது மனைவி சாரதா(20) இவர்கள் சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே காட்டிலின் தம்பதிகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலை இருவரும் தலை கழுத்து போன்ற பகுதிகளில் விட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு […]

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கைவயல் பகுதிக்குட்பட்ட குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மற்றொரு சமூகத்தினர் இதுபோன்று செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என பலரும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதுவரை இந்த  மனிதாபிமானமற்ற செயலை செய்தது யார்? என்பது தெரிய வராத நிலையில், காவல்துறையினர் […]

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாலமுருகன் (47) இவருக்கு போது மணி என்ற மனைவி மற்றும் சூரிய சுகம் உள்ளிட்ட இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மகள் நாகஜோதி திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். மூத்த மகனான சூர்யா குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். 2வது மகனான […]

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவும் ரோஜாவும், சிலம்பரசனும் தகராறு செய்து கொண்டனர். இதில் வாக்குவாதம் […]