தமிழகத்தில் ஒரு காலத்தில் பள்ளிக்கு சென்று படிப்பதற்கு பிள்ளைகளே இல்லாமல் இருந்தனர். ஆனால் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இதனை கருத்தில் கொண்டு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது பள்ளிகளில் மதிய உணவு திட்டம் என்பது அவர் கொண்டு வந்தது தான். அதன் பிறகு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அந்தத் திட்டத்தை விரிவு படுத்தினார். இன்றளவும் அந்த திட்டம் மாணவர்களிடையேயும், பெற்றோர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல […]

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் அசிசி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 110 மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். […]

கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திமுக ஆட்சிக்கு வந்து அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முடித்து வைக்கும் அளவிற்கு வந்தது. ஆனால் இந்த வழக்கு தொடர்வாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் […]

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே கோடை காலம் என்பது கோடைகாலமாகவே காட்சி தரவில்லை. மாறாக பருவ மழை காலமாகவே காட்சி தந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து பொதுமக்கள் சிரமப்பட்டாலும் அவ்வப்போது மழை வந்து அந்த சிரமத்தை தணித்து விடுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை அடுத்த 1 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]

இன்றைய காலகட்டத்தில் படிக்காமல் இருக்கும் அவர்களுக்கு கூட வேலை கிடைத்து விடுகிறது. ஆனால் வங்கியில் கடன் வாங்கி 4 வருடம் அல்லது 3 வருடம் கஷ்டப்பட்டு படித்த நபர்களுக்கு இன்று சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, படித்துவிட்டு சிலர் விரக்தியில் இருக்கிறார்கள். ஆனால் படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது ஆனால் அந்த வேலை வாய்ப்பு அறிவிப்பானது படித்தவர்களின் கண்களில் படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. […]

டாட்டா மோட்டார்ஸின் பிரபலமான கார் மாடல்களில் ஹாரியரும் ஒன்று. இது ஒரு எஸ்.யூ.வி ரக கார் என்று கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் அதிக சொகுசு வசதிகளை கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தளத்தை கொண்டுதான் டாட்டா மோட்டார்ஸ் இந்த காரை வடிவமைத்திருக்கிறது. இதன் காரணமாக தானோ என்னவோ மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி காராக அது காட்சி தருகிறது. இந்த மாடலின் எலக்ட்ரிக் வர்ஷனையே டாடா […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள […]

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்குகள், ஜூலை 13-ம் தேதிக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தமிழ்நாடு […]

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் […]

வட்டாரக்‌ கல்வி அலுலவர்‌ பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌, வட்டாரகக்‌கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ http://www.trb.tn.gov.in என்ற இணையகளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ ஜூன்‌ 6-ம்‌ தேதி முதல்‌ ஜூலை 5-ம்‌தேதி மாலை 5 மணி வரையில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர்‌ பணியில்‌ 33 இடங்கள்‌ […]