தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், தொடக்கத்தில் விண்ணப்பித்துத் தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது பிற தரவுப் பிழைகளாலோ நிராகரிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்போது ஒரு முக்கிய விடியல் பிறந்துள்ளது. தகுதியிருந்தும் தங்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என கருதிய பெண்கள், அரசின் kmut.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை மேல்முறையீடாகப் பதிவு செய்திருந்தனர். ஆயிரக்கணக்கில் குவிந்த இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் தரப்பிலிருந்து அதிகாரிகளுக்கு […]

திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது ‘நினைத்தாலே முக்தி’ தரும் அந்த மகா திருத்தலத்தின் மகிமைதான். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் இங்கு, சிவபெருமானே மலையாக காட்சியளிப்பதால், இம்மலையைச் சுற்றி வரும் கிரிவல வழிபாடு கைலாய மலையை வலம் வருவதற்கு நிகரானதாக கருதப்படுகிறது. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் அரூபமாக உலவும் இந்த ஆன்மீக பூமியில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வது குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது […]

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது.. தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்க்ள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.. பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]

தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் களத்தில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்.. அவரின் இந்த நிலைக்கு என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார்.. வரும் செப்டம்பர் மாதம், ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகி 25 ஆண்டுகள் ஆகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது உதவியாளர் வி. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் குதித்துள்ளதால் அரசியல் சதுரங்கம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற […]

வேலூர் மாவட்டம் ஊசூர் பகுதியில் தனது சித்தியுடனான கள்ளக்காதலை மறைக்க, மனைவியையே கொலை செய்ய துணிந்த ஒரு கணவனின் கொடூர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேஷ்குமார் – அனுசுயா தம்பதியினரின் 13 ஆண்டுகால மணவாழ்க்கை, ஒரு ரகசிய ஆடியோ பதிவால் இன்று சிதைந்து போயுள்ளது. வழக்கம்போல மதுபோதையில் வந்த ராஜேஷ்குமார் வாசலில் விழுந்து கிடக்க, அவரைத் தூக்க முயன்ற அனுசுயாவின் கையில் தற்செயலாக கணவனின் செல்போன் கிடைத்துள்ளது. அதில் […]