ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளியான 51 வயது சிவசுப்பிரமணியன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மறுநாள் காலை அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் […]
2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில், வங்கிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் அதிக விடுமுறைகள் வருவது வழக்கம். ஆனால், நடப்பு பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவிலான பொது விடுமுறைகள் இல்லாத காரணத்தால், வங்கிகள் பெரும்பாலான நாட்கள் செயல்பட உள்ளன. வார விடுமுறை மற்றும் குறிப்பிட்ட மாநில பண்டிகைகளை உள்ளடக்கி, இம்மாதத்தில் […]
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆக வேண்டும் என்ற கனவோடு காத்திருந்த இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 46 மையங்களில் நடைபெற்ற 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சுமார் 1.78 லட்சம் பேர் பங்கேற்ற இந்தப் போட்டித் தேர்வின் முடிவுகள், வாரியத்தின் அதிகாரப்பூர்வ […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கங்கள் இப்போதே தனிநபர் விமர்சனங்களாகவும், காரசாரமான விவாதங்களாகவும் உருவெடுத்துள்ளன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது தீவிர தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் எத்தகைய திசையை நோக்கிச் செல்கிறது என்பது புரியாத புதிராக உள்ளதாக அவர் […]
தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். சிதறிக் கிடக்கும் அதிமுக-வின் பல்வேறு பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார். கட்சியில் மீண்டும் இணைவது […]
கமல் அரசியலில் உலகநாயகனாக மாறுவார் என நினைத்தால் நகைச்சுவை நாயகனாகிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசியிருந்தார்.. மேலும் ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என டிவியை உடைத்த உலகநாயகன் கடைசியில் இந்த நிலையில் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும், கவிஞருமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சினேகன் “ எந்த கேட்டகரியில் செல்லூர் ராஜுவை சேர்ப்பது என தெரியவில்லை.. எப்போதுமே அரசியல் […]
சென்னை விமான நிலையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பொஅட்டது.. தீ விபத்தால் ஏற்பட புகை சர்வதேச விமானங்கள் புறப்படும் பகுதியை சூழந்ததால் பரபரப்பு நிலவியது.. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. […]
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]

