மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
ரவுடிகளின் தலைமையிடமாக தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு […]
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவத்தின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான […]
திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மேட்டுப்பட்டி பகுதியில் ஒரு பிரம்மாண்ட அரசியல் இணைப்பு விழாவை முன்னெடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த உற்சாகமான நிகழ்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற […]
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் அருகே அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆதி என்பவர், மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியைப் பார்ப்பதற்காக இன்று அதிகாலை […]
பாட்டாளி மக்கள் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுக்கோப்பிற்கும் முரணாக செயல்பட்டதாகக் கூறி 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவக்குமார் (மயிலம் சட்டமன்ற உறுப்பினர்), சதாசிவம் (மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்பாடுகளில் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் நிலவி வந்த காலதாமதத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பயிர்க்கடனுக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, அதே நாளில் கடன் தொகையை வழங்கும் புரட்சிகரமான திட்டம் இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழகத்தின் அனைத்து […]
தமிழ்நாட்டில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்புடன், தமிழக […]
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவத்தின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு […]

