தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பிரதான கட்சிகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த முகமாகவும், அக்கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராகவும் கருதப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அவர் கட்சிக்குள் வந்த பிறகு, மற்ற கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை ஈர்க்கும் பணி […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், வன்னியர் சமூக வாக்குகளை மையப்படுத்தி புதிய அரசியல் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் மகள் குரு விருதாம்பிகை, புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சிக்கு ‘ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாட செல்வது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் […]
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ நேற்று (05-01-2026) தெற்கு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மாலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]
உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 2030-ம் ஆண்டுக்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. […]
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் […]
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர். ஆர். என். ரவியை சந்தித்தார்.. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது.. ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தோம். 2021-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆளுநரிடம் […]
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு […]

