ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம் பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன.இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு […]

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களின் புத்தாக்க முயற்சிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிதி அளித்து, மகளிரை அதிகாரம் படைத்தவர்களாக மாற்ற ஏதுவாக, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கியை அமைப்பது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருதாகக் அத்துறைக்கான அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் தயாரிக்கப்பட்டப் பொருட்களுக்கான கண்காட்சியான சாராஸ் அஜீவிகா மேளா […]

நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன்படுத்தலாம். இதில், அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம் ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை, செரியாமை […]

மன அழுத்தத்தை குறைக்க உதவும் க்ரீன் டீயில் உள்ள நன்மைகள் ஏராளம். இருப்பினும், சில உடல்நல தீங்குகளும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற்து கிரீன் டீ. இருப்பினும், கிரீன் டீ குடிப்பதால் […]

திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி 60 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரதிய ஜனதா கட்சி இலவச ஸ்கூட்டி வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்… காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலுக்கு முன்பே, […]

நெயில் பாலிஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்கள் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களாகிய நாம் எல்லோரும் அழகாக இருக்கவே விரும்புகிறோம். அழகு தன்னம்பிக்கையை அளிக்க கூடியதும் கூட. அழகு சாதனப்பொருட்கள் இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. நாம் பல்துலக்க, குளிக்க, வாசனை உண்டாக்க பற்பசை, சோப், ஷாம்பு, பாடி ஸ்பிரே ஆகியவற்றை உபயோகிக்கின்றோம். நம்முடைய அழகினைக் […]

வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், பின்பற்றவேண்டிய உணவு பழக்கங்கள் உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்கள் தங்கள் வாழ்நாளில் வழக்கத்தை விட கர்ப்பகாலத்தில்தான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த காலத்தில், பெண்ணின் உடலில் பல மாற்றங்களால், சற்று அசெளகரியமாக உணருவார்கள். குமட்டல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும்.நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்தவகையில், அதிக […]

“புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், […]

மும்பையில், முகம் பொழிவு பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், முகம் பொழிவு பெறுவதற்காக, அப்பகுதியில் செயல்பட்டு வந்த அழகு நிலையத்தில் க்ரீம் ஒன்றை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் அந்த க்ரீமை தடவிய சில நாட்களிலேயே, இளம்பெண்ணின் முகம் நன்றாக நிறமாற்றம் அடைந்துள்ளது. இதனை […]

அஸ்ஸாம் மாநில காவல்துறை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,278-ஐ கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக போடப்பட்ட 4,074 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தில் குறைந்தது 139 பேரும், பார்பேட்டாவில் 130 பேரும், துப்ரியில் 126 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் […]