வங்கதேச வீரர்களை ஐபிஎல் அணிகளில் சேர்த்ததற்கு எதிராக சில இந்து அமைப்புகள் காட்டி வரும் கோபம், தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக் கானை குறிவைக்கும் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது. சமீப காலமாக வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதல்களை முன்னிட்டு, ஷாருக் கானுக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளன. மீரா ரத்தோர் வெளியிட்ட சர்ச்சை அறிவிப்பு அக்ராவில், அகில இந்திய இந்து மகாசபையின் மாவட்டத் தலைவர் மீரா ரத்தோர், “ஷாருக் கானின் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் (Balochistan) பகுதியில் சீனா தனது இராணுவத்தை விரைவில் நிலைநிறுத்தக்கூடும் என பாலூச் தலைவரான மிர் யார் பலூச் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கு அவர் ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில், சீனா – பாகிஸ்தான் கூட்டணி பலூசிஸ்தான் மக்களுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது […]
மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தன்னை திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை, பெண் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண் தனது காதலனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. காயமடைந்த அவர் எப்படியோ உதவி பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி […]
அரசுக்குச் சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), பிப்ரவரி 1, 2026 முதல் வழங்கப்படும் அனைத்து புதிய ஃபாஸ்டேக்குகளுக்கும், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான கட்டாய ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) செயல்முறையை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே உள்ள ஃபாஸ்டேக்குகளுக்கு, KYV இனி ஒரு வழக்கமான தேவையாக இருக்காது. இந்த முடிவு, பொதுமக்களின் வசதியை உறுதி செய்வதையும், லட்சக்கணக்கான நெடுஞ்சாலைப் பயனர்கள் ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு எதிர்கொள்ளும் […]
மத்திய அரசு டிசம்பர் 2025 மாதத்திற்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் புள்ளிவிவரங்களை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நிதியாண்டின் கடைசிப் பகுதியான இந்த மாதத்தில், அரசாங்கம் ஜிஎஸ்டி மூலம் ரூ. 1.74 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. டிசம்பர் 2024-ல் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.64 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த முறை அதைவிடத் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் […]
பணியாளர்களின் சம்பளம், பிஎப் (PF), கிராஜுவிட்டி, அலவன்ஸ் தொடர்பாக பல மாதங்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் புதிய தொழிலாளர் சட்டக் கோடுகள் (Labour Codes) தொடர்பான வரைவு விதிகளை வெளியிட்டு, அவற்றை பற்றிய கேள்வி–பதில்கள் (FAQs) தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், புதிய அமைப்பில் உங்கள் சம்பளம் எவ்வாறு கட்டமைக்கப்படும், ஒரு ஊழியருக்கான பணிக்கொடை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த […]
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கால்பதித்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற முதியவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில், வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் முந்தைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரங்கள் மற்றும் பணவீக்கக் காரணிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த […]
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை காங்கிரஸ் மற்றும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி (கே.ஆர்.பி.பி) சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 28 வயதுடைய காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஆவார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 3 அன்று நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, பல்லாரி நகர […]
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கலால் (Excise) வரியில் பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2026 பிப்ரவரி 1 முதல் […]
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான நீரால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.. அங்கு 6 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த மரணம் உள்ளூர் மக்களிடையே கோபத்தையும் போராட்டங்களையும் தூண்டியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் உள்ள மராத்தி மொஹல்லாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் தாய் சாதனா சாஹு, வீட்டு விநியோகக் குழாய் நீரில் கலக்கப்பட்ட பாலைக் குடித்த பிறகு, குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு […]

