பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், ஒரு சிறு குழந்தையை பாலியல் நோக்கத்துடன் அந்தரங்க உறுப்புகளைத் தொட வைப்பது, தீவிரமான பாலியல் குற்றமாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 4 வயதுடைய சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்புகளைக் காட்டி, அவற்றை அவளைத் தொட வைத்ததற்காக, போக்சோ சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.. இந்த மேல்முறையீட்டு […]

வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர்கள் உடனடியாக இ-கேஒய்சி (eKYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், கேஸ் சிலிண்டர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உங்களுக்கு வர வேண்டிய கேஸ் சிலிண்டர் மானியப் பணம் நின்றுவிடும் என்றும், மேலும், எதிர்காலத்தில் உங்களால் கேஸ்சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது என்றும் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தியாவின் எரிசக்தி மற்றும் வர்த்தக கொள்கைகள் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், இந்திய பொருட்களுக்கான சுங்க வரிகளை மிக விரைவாக உயர்த்தலாம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசிய அவர் “ மோடி ஒரு நல்ல மனிதர். நான் சந்தோஷமாக இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். என்னை மகிழ்விப்பது முக்கியம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்,” […]

நம் நாட்டில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருப்பதற்காக மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலை செய்வது பற்றி தினமும் செய்திகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இருப்பினும், இதற்குப் பின்னால் பல சமூக, உளவியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள், மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை அனைத்தும் சேர்ந்து அவர்களைத் திருமணத்திற்குப் […]

ஹரியானா மாநிலம் அம்பாலாவில், சமூக வலைதளங்கள் மூலம் “ஹனிட்ராப்” செய்து ஏமாற்றி, இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டின் பேரில் 31 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்கா கிராமத்தைச் சேர்ந்த சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை அம்பாலா கண்டோன்மென்ட் பேருந்து நிலையம் அருகே போலீஸார் பிடித்தனர். சமூக வலைதளங்களில் […]

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபூர் பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக மறுமணம் செய்ய மறுத்ததால், காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்டதும், பின்னர் அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டதும் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. எல்லாபூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக […]

1800-களின் இறுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும், மருத்துவ உலகம் ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வந்தது. அப்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்கள் கூட மனிதர்களை கொத்துக்கொத்தாக பலி வாங்கின. இந்த இக்கட்டான சூழலில் தான், 1944-ஆம் ஆண்டு ‘பென்சிலின்’ (Penicillin) என்ற மருந்து அறிமுகமானது. பாக்டீரியா தொற்றுகளை மிக எளிதாகக் குணப்படுத்திய இந்த மருந்தை மருத்துவர்கள் அதிசய மருந்து (Wonder Drug) என்று போற்றினார்கள். ஒரு உயிரைக் […]

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு ‘பிஎம் இ-டிரைவ்’ (PM E-DRIVE) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2024 செப்டம்பரில் முடிவடைந்த ஃபேம்-2 (FAME-II) திட்டத்திற்கு பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம், வரும் 2026 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும். மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு நேரடி மானியம் வழங்குவதுடன், நாடு முழுவதும் […]

நீங்கள் தங்கம் போன்ற ஒரு நீண்ட கால சொத்தை விற்றால், பொதுவாக மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இந்த வரி செலுத்துதலை சட்டப்பூர்வமாகக் குறைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54F மூலம் இது சாத்தியமாகிறது. இந்தப் பிரிவின் மூலம், வரி செலுத்துவதற்குப் பதிலாக, லாபத்தின் ஒரு பகுதியை வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நாம் வரிச்சுமையைக் குறைத்து, சொத்து வடிவில் […]