சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளார். தனது கட்சியின் முதல் தேர்தல் போட்டிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குப் பிறகு முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார்.. தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் […]

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில், உயரமான மலைகளின் நடுவிலும், முடிவில்லாத பனிச்சரிவுகளின் நடுவிலும் ட்ராஸ் (Dras / Drass) என்ற ஹிமாலய ஊர் அமைந்துள்ளது. உலகில் மனிதர்கள் வசிக்கும் இடங்களில், இரண்டாவது மிகக் குளிரான பகுதி இதுவாகும்.. இதனால் இந்த இடம் மிகவும் பிரபலமானது.. ஸ்ரீநகரிலிருந்து கார்கில் நோக்கி செல்பவர்கள் பலருக்கு, ட்ராஸ் என்பது சாலையோர அடையாளப் பலகையில் ஒரு பெயராக மட்டுமே தோன்றுகிறது. ஆனால் இந்த ஊரின் இயற்கை காட்சிகள் […]

டெல்லியில் உள்ள பல கீழமை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை தேசிய தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. சாகேத் நீதிமன்றம், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், தீஸ் ஹசாரி நீதிமன்றம், ரோகிணி நீதிமன்றம் மற்றும் துவாரகா நீதிமன்றம் மற்றும் பல மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு வேன்கள், மோப்ப நாய் உதவி உடன் வெடிகுண்டு செயலிழப்பு […]

பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக சுமார் 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு பொறுப்பான மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மா, இன்று போலீசார் உடனான என்கவுண்டருக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அதிகம் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் ஆவார்.. ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1981 ஆம் ஆண்டு சுக்மாவில் பிறந்த ஹித்மா, 1996 ஆம் ஆண்டு மக்கள் […]

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் ஓட்டியதாக கூறப்படும் டாக்டர் உமர் உன் நபி தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், நபி “தற்கொலைப் படை தாக்குதல்” (suicide bombing) என்ற எண்ணம் எப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் பேசுகிறார். நவம்பர் 10க்கு முன் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோவில், உமர் நபி ஒரு அறையில் தனியாக அமர்ந்து […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகன் சவுரப் (30). சவுரப்புக்குத் திருமணம் ஆன நிலையில், தந்தை சுபாஷ், தனது மருமகள் உடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற உறவு குறித்து மகன் சவுரப்புக்கு தெரியவந்தபோது, அவர் தந்தை சுபாஷுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில், […]

செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை மேலும் தீவிரமாகியுள்ளது. இன்று அதிகாலை 5:15 மணிக்கு, அமலாக்கத்துறை Enforcement Directorate (ED) அதிகாரிகள் டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள Al-Falah குழுமத்துடன் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தினர். இந்த சோதனைகள், ‘ஷெல்’ நிறுவனங்கள், தங்குமிட உதவிகள் மற்றும் சந்தேகமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக நடைபெறும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும். அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் டெல்லி அலுவலகத்திலும் […]

கனமழை காரணமாக காரைக்கால், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் […]

அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்திற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல். அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான கட்டணம் 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 லட்சம் பிரதிகளைக் கொண்ட நாளிதழ்களில் கருப்பு வெள்ளை விளம்பரங்களுக்கு ஒரு சதுர சென்டி மீட்டருக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண விகிதம் ரூ. 47.40 என்பது 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.59.68 ஆக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வண்ண விளம்பரங்களுக்கான […]