EPFO | நீங்கள் மாத ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் உங்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை உங்கள் நிறுவனமும் சேர்த்து பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்தத் தொகை உங்கள் ஓய்வுக் காலத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும். நிறுவனம் செலுத்தும் தொகை 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் […]

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஷேக் அம்ஜத் என்பவர், குடும்ப பிரச்சனையால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானம் செய்வதற்காக 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று மனைவியைச் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அம்ஜத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து […]

சுமார் 375 பொருட்களுக்கான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருவதால், சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை இன்று முதல் விலை குறையும். அந்தவகையில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு அரசு மிகப்பெரிய ஜிஎஸ்டி குறைப்பை அறிவித்துள்ளது. “புற்றுநோய், அரிய நோய்கள் அல்லது கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று உயிர்காக்கும் மருந்துகள் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளன. பல மருந்துகள் 12 […]

சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வருவதால் பல பொருள்களின் விலை குறையவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்தது. இதன் அடிப்படையில், தற்போதைய நான்கு வகை வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன: 5% – அத்தியாவசியப் பொருட்கள்18% – பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள்40% – பிற பொருட்கள் (தூயிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் […]

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. மேலும் டபுள் போனஸாக, ஜூலை மாதத்தில் […]

ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ரயில் பயணத்தின் போது, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களிலும், ரயில்களில் “ரயில் நீர்” என்ற தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நீர் பாட்டில், இந்திய ரயில்வேயால் வழங்கப்படும் ஒரு பிராண்டட் குடிநீர் பாட்டில் ஆகும். இது பயணிகளுக்கு வசதியாக ரயில்வே வளாகத்தில் விற்கப்படுகிறது. […]

நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், நவராத்திரியின் முதல் நாளான நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நற்செய்தியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடி பேசுகையில், நாளை முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளது. நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாளில் […]

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் நாளை, செப்.22 முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசுகையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 4 அடுக்குகளில் இருந்து (5%, 12%, 18% மற்றும் 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் ‘sin goods’ எனப்படும் ஆடம்பரப் பொருட்களுக்கு […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. பிரதமர் என்ன பேசுவார் என்பது குறித்த தகவல்களை அரசு வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. இதனால், இந்த உரை குறித்து தேசிய அளவில் கவனம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளைய தினம் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், இதுபற்றி […]

இந்தியாவில் பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய மருந்து ஆய்வகங்கள் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் வழக்கமான ஆய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகளின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சோதனையில், மத்திய மருந்து ஆய்வகங்கள் […]