நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தர்யா, காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் உள்ள வாடகை வீட்டில், தினேஷ் என்பவரும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். வேலை தேடி வந்த இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இவர்களின் காதல் தெரிந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் இவர்களுக்குத் […]

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டது) என்ற மென்பொருள் நிறுவன ஊழியர், கொரோனா காலகட்டத்தில், அதாவது 2021-ஆம் ஆண்டில் வேலையை இழந்துள்ளார். இதனால், நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். பின்னர், பாலியல் தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியான போதிலும், சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டதால், தனது தோழி கீதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரின் வழிகாட்டுதலில் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ஆணுறை இல்லாமல் உறவு கொண்டு, தவறான மருத்துவ ஆலோசனையால் கருக்கலைப்பின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், தொழில் நிமித்தமாக ஃபரிதாபாத்திற்கு வந்துள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் அனில் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை […]

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில், மும்பையில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025 நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) இணைந்து தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) யுபிஐ சேவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த, ரகசிய PIN எண்ணை உள்ளிடுவது அல்லது தொலைபேசியை எடுத்துச் செல்வது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, பயனர்கள் முகம் அல்லது […]

நாகரிகமான உலகில் வாழ்ந்து வந்தாலும், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இன்றும் உலகின் சில பகுதிகளில் இந்த கொடிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? ஆம் இந்த கொடிய நடைமுறையானது இன்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ளது. இது தவிர ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இப்பழக்கம் உள்ளது. இந்தியாவிலும், […]

அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள சுவாரஸ்யமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றாலும், […]

பீகாரிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமார் 100 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய […]

மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இது 2024 ஆம் ஆண்டு ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கர் வழக்கை நினைவூட்டுகிறது. ஒடிசாவின் ஜலேஸ்வரைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய தொழில்துறை மையமான துர்காபூரில் உள்ள ஷோபாபூர் […]

கூகிள் பே (Google Pay) இன்னும் அரசாங்கத்தின் மோசடி ஆபத்து குறியீட்டுக் கருவியை (FRI) தனது தளத்தில் ஒருங்கிணைக்கவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் நீரஜ் மிட்டல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தொலைத்தொடர்பு துறை (DoT) உருவாக்கிய FRI (Fraud Risk Identification) அமைப்பு, தொலைபேசி எண்களை அவற்றின் அபாய நிலை அடிப்படையில் வகைப்படுத்துகிறது. இது டிஜிட்டல் கட்டண தளங்களுக்கு மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவுகிறது. பயனர்கள் டிஜிட்டல் […]

2026-27 கல்வியாண்டு முதல், 3 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும், செயற்கை நுண்ணறிவு (AI) விரைவில் இந்தியாவின் பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளிக் கல்வியில் AI ஐ ஒருங்கிணைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்விச் செயலாளர் சஞ்சய் குமார் இதுகுறித்து […]