தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து பணியாற்றி வரும் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளார். இதற்கு இடையே நடந்த 2024 மக்களவை தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை. […]

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருக்கிறார் என்று சந்தேகம் எழுந்தால், அதனை உறுதிப்படுத்த, தனது கணவரின் இருப்பிட விவரங்கள், அழைப்புத் தரவு பதிவுககள கோரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை தீர்ப்பளிக்கும் செயல்முறைக்கு உதவும் புறநிலை பதிவுகள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம்தனது கணவரின் கள்ளக் காதலியின் இருப்பிட விவரங்களையும், கணவரின் இருப்பிட விவரங்களையும், கணவரின் அழைப்பு விவரப் பதிவை […]

பயங்கரவாதப் படைகளில் “மனித ஜிபிஎஸ்” என்று பிரபலமாக அறியப்படும் பாகு கான் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தார்.. ஊடுருவலுக்கு மிகவும் பழமையான மற்றும் மிகவும் பயனுள்ள உதவியாளர்களில் ஒருவரான பாகு கான், நவ்ஷேரா நார் பகுதியில் […]

நாடு முழுவதும் கடந்த 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.. இதை தொடர்ந்து பல இடங்களில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் நேற்று மாலை பெங்களூருவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.. இந்த ஊர்வத்தின் போது, பட்டாசுகள் வெடித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தொட்டபல்லாபூர், முத்தூரைச் […]

தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் உள்ள பம்பர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.. தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் மொத்தம் 3518 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, அவர்கள் தெற்கு ரயில்வே sr.indianrailways.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இந்த […]

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதை தொடர்ந்து பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.. சமீபத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.. மேலும் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையில் 5 பேர் இறந்தனர்.. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரே […]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்களில், 41 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. கனமழையால், தாழ்வான […]

வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து […]

பாகிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், வாகா-அட்டாரி எல்லையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே எதிர்வினையை தூண்டியுள்ளது. சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், வாகா எல்லையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடக்கும் தினசரி தேசிய கொடி இறக்கும் விழாவின் போது, பாகிஸ்தான் பக்கம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் இந்தியா பக்கம் நன்கு சுத்தமாகவும், அமைதியாகவும் காணப்பட்டது. இதைக் கண்ட நெட்டிசன்கள் […]

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும், 2 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், […]