பீகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில், ஜெயநகர்–உத்னா அந்தியோதயா விரைவு ரயிலின் காலிக் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுபானி ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில், ரயில் பெட்டிகளை இடம் மாற்றும் (shunting) பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுப் பெட்டியும் சாம்பலானது தீ மளமளவெனப் பரவி முழுப் பெட்டியையும் சூழ்ந்துகொண்டது; சிறிது நேரத்திலேயே அந்தப் பெட்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் அதிகாலை […]

நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். பல மாநிலங்கள் கடுமையான கோடை வெப்பத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும், தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் அவர் அறிவுறுத்தினார். தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்ட அவர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்பவர்கள் […]