இந்தியாவின் பொது விநியோக திட்டத்தில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய முறையில் ரேஷன் கடைகள் வழியாக வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, அதற்கான தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய நடைமுறையை கொண்டுவர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி மக்கள் பயனடைந்து வரும் நிலையில், […]

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது.. இந்த பலி எண்ணிக்கை தற்போது 16-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. லும் பலர் சிக்கிக்கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார். சுரங்கத்தில் இருந்து 16 உடல்கள் […]

பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. 140 கோடி இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்று இந்தியா மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சந்தை நிலவரங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தியா தனது எரிசக்தி கொள்முதலை பல்வகைப்படுத்தும் என்றும் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்புகளால் தவித்துக் கொண்டிருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவில் நிலவி வந்த கசப்புணர்வை நீக்கும் வகையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகளை அமெரிக்கா கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்ப், தனது ‘பரஸ்பர வரி’ (Reciprocal Tax) கொள்கையின் மூலம் உலக நாடுகளை […]

போதுமான மற்றும் நியாயமான காரணம் இல்லாமல் கணவரிடமிருந்து பிரிந்து வாழத் தேர்ந்தெடுக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீவனாம்சம் கோரும் உரிமையைத் தீர்மானிக்க திருமண நிலை என்பது மட்டும் அடிப்படையல்ல என்றும், நடத்தையின் மீதும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில், ஒரு பெண் திருமணமான நான்கு நாட்களுக்குப் பிறகு, வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவர் மற்றும் […]

மத்திய பட்ஜெட் 2026-ல் சாமானிய மக்களின் சமையலறை தேவைகளை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், குறிப்பாக ஏழை எளியப் பெண்களின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்குப் புகையில்லா சமையல் […]

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருவர் காயமடைந்துள்ளார், மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்துள்ளார். “இன்று காலை வெடிவிபத்து நிகழ்ந்ததை எங்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது, இருப்பினும் சுரங்கத்திற்குள் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.. கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.. 2-ம் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது ராகுல்காந்தி பேசும் போது முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவவே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்கள் சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதற்கு […]

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. பாலக்காடு நகருக்கு அருகே ஒரு வேனில் இருந்து வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெட்டிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சரக்கு முற்றிலும் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதால், இந்த மீட்பு நடவடிக்கை அப்பகுதி முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மருத்துவக் கல்லூரிக்கு அருகே அந்த வாகனத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய பெட்டிகளையும், 20-க்கும் மேற்பட்ட […]

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகபுரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல்-நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதனால் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. அந்த ரயில் புவனேஷ்வரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பத்ரக்கில் இருந்து ஒரு மீட்பு மற்றும் சீரமைப்பு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையை மேற்பார்வையிட்ட அதிகாரிகள், அனைத்து பயணிகளும் காயமின்றி […]