பாதுகாப்பான தகவல்தொடர்புக்கான புதிய தளமாக விளங்கும் குவாண்டம் தகவல்தொடர்பு தொழில்நுட்பம், இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இந்த துறையில், இந்தியா 2030க்குள் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி நீண்ட தூரங்களில் பாதுகாப்பான குவாண்டம் தொடர்பு ஏற்படுத்தும் திறனைப் பெறும் என, IIT டெல்லி பேராசிரியர் பாஸ்கர் கன்சேரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில், IIT டெல்லி குழு ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் குவாண்டம் விசை விநியோகம் நிகழ்த்தியுள்ளது. இது, இணைக்கும் கேபிள்கள் இல்லாமல், இந்தியாவில் […]

கேரள மாநிலத்தில், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளின் வீடுகளில், போலீசார் இரவில் வாரண்ட் இல்லாமல் நுழைவதைத் தடை செய்யும் வகையில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி வி.ஜி. அருண் வழங்கிய தீர்ப்பில், வீட்டின் தனித்தன்மையை காவல்துறை மதிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் காவல் துறை கையேட்டில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கேரள […]

மழை, வெள்ளம் வந்தாலும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தொடரும் என்றும் நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புதிய சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) வளாகம் மற்றும் மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மழைக்காலத்தின் ஒவ்வொரு முறையும், […]

தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் ஒருவர் 49 சிகரெட்கள் புகை பிடித்தால் எந்தளவுக்குப்பாதிப்பு ஏற்படுமோ, அதே அளவு […]

புனேவின் ஜெஹாங்கிர் மருத்துவமனை மருத்துவர்கள், 68 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த 18 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர். பீகாரைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட 68 வயதான பெண் ஒருவர், நாள்பட்ட வயிற்று வீக்கம் மற்றும் அசௌகரியத்தை அனுபவித்து வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் சோதனை செய்த நிலையில், ஒரு பெரிய கருப்பை கட்டி இருப்பது தெரியவந்தது. சாதாரண கட்டி என்றாலும், அதன் வளர்ச்சியின் தன்மை […]

பிரதமர் நரேந்திர மோடி அரசியலைத் தாண்டி எப்போதும் செய்திகளில் இடம் பெறுகிறார். சில நேரங்களில் அவரது உடைகளுக்காகவும், சில நேரங்களில் அவரது உணவுப் பழக்கவழக்கங்களுக்காகவும், சில நேரங்களில் அவரது வாழ்க்கை முறைக்காகவும் தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். இதனால் பிரதமர் மோடியின் அன்றாட வழக்கமும் வாழ்க்கை முறையும் மக்களை மிகவும் ஈர்க்கிறது. பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில், அவர் மிகவும் ஒழுக்கமான மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். இருப்பினும், பிரதமருக்கு […]

வாக்குச் சாவடி காட்சிகளைப் பொதுவில் வெளியிடுவது வாக்காளரின் தனியுரிமையை மீறும் செயல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி காட்சிகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை பகிர்வது வாக்காளர் தனியுரிமையை மீறும் மற்றும் ஜனநாயக செயல்முறைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதாகத் தோன்றினாலும், அவை […]

3 ஏர் இந்தியா அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய DGCA உத்தரவிட்டுள்ளது. விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA , ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. ஒரு பிரிவு துணைத் தலைவர் உட்பட, பணியாளர்கள் என 3 அதிகாரிகள் அட்டவணைப்படுத்தல் மற்றும் பணியமர்த்தல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறியதைத் தொடர்ந்து, ஏர் […]

“இன்றைய கலவரமான காலகட்டத்தில், யோகா அமைதியை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி. இது மனிதன் உள்ளமைவையும் உடலையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய மோடி, 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள […]