“இன்றைய கலவரமான காலகட்டத்தில், யோகா அமைதியை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி. இது மனிதன் உள்ளமைவையும் உடலையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய மோடி, 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள […]

சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த பிரமாண்ட நிகழ்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். ஜூன் 21 அன்று இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஒரு பூமிக்கான யோகா, ஒரு ஆரோக்கியம்”, தனிப்பட்ட நல்வாழ்விற்கும் கிரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பை வலியுறுத்துகிறது, இது ” […]

இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றடைந்தார். சர்வதேச யோகா தினமான இன்று சனிக்கிழமை (ஜூன் 21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்று, உதம்பூர் கண்டோன்மென்ட்டில் உள்ள ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளை தலைமையகத்தில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், புதிய இந்தியா உறுதியானது என்பதற்கும், இனி […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் அதன் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவுவதாகவும், ஆனால் எண்ணெய் பற்றாக்குறை இல்லை […]

மக்களவை எதிர்கட்சி தலைவருக்காக அரசு ஒதுக்கிய பங்களாவுக்கு மாற ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெல்லி துக்லக் லேன் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தவர் ராகுல் காந்தி. 2023 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் பதவியை இழந்த ராகுல்காந்தி பங்களாவை காலி செய்து விட்டு தாயார் சோனியா காந்தியின் No.10 ஜன்பத் இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர், நீதிமன்றம் […]