சர்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ செயல்படுத்துவதற்கான விதிகளை மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் வரைவு செய்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது என்றும் இந்த விதிகள் 15-20 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை 21 முதல் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் அவற்றை வழங்க வழி வகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மையில் பெரும் மாற்றங்களைச் செய்வதை […]

மணிப்பூர் மக்கள் யாருமே அம்மண்ணில் தோன்றியவர்கள் அல்ல. ஆரம்ப காலத்தில், அண்டை தேசங்களில் இருந்து குடியேறிய மங்கோலிய இனக்கூறு உடைய மக்களே இவர்கள். இவர்களில், ‘மெய்தி’ என்றழைக்கப்படும் பழங்குடிகளே மூத்த குடிகள். அதாவது, முதலில் குடியேறியவர்கள். இவர்களுக்கு பின் குக்கிகள், அடுத்து நாகர்கள் மற்றும் பிற பழங்குடிகள் மணிப்பூருக்கு வந்து, ஆளாளுக்கு ஒரு பிராந்தியத்தில் வாழத் துவங்கினர். பவுத்த கலாசார பாரம்பரியம் உடைய மெய்தியினருடன் ஒப்பிடுகையில், குக்கிகள் முரட்டு குணம் […]

ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), myAadhaar போர்ட்டலில் ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 14, 2026 வரை நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான ஆதார் அட்டைதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 14, 2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. UIDAI தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த […]

கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண்கள், பெண்கள், உலகமறியாத பச்சிளம் குழந்தைகள் என பல உயிர்கள், இந்த கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், சமீபத்தில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் திருமணம் ஆன 36 நாட்களில், 22 வயது இளம்பெண் […]

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5976 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 507 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 40 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, ஜனவரி 2025 முதல் புதிய மாறுபாட்டால் 116 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. புதன்கிழமை 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2 பேரும், கேரளாவில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக […]

273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த […]

சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் […]

கேரளாவில் உள்ள தனியார் பெட்ரோலிய நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 300 சில்லறை விற்பனை நிலைய விற்பனையாளர்களின் சங்கமான பெட்ரோலிய வர்த்தகர்கள் நலன் மற்றும் சட்ட சேவை சங்கம், தங்கள் தனியார் கழிப்பறைகளை பொது வசதிகளாக மாற்றுவதற்கான அரசாங்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் […]