எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்களின் வடிவம் முற்றிலும் மாறப்போகிறது. இதுவரை, நாம் சிவப்பு நிற இரும்பினால் செய்யப்பட்ட எல்பிஜி சிலிண்டர்களைப் பார்த்திருக்கிறோம். அவை பழையதாகவும், சேதமடைந்ததாகவும், அழுக்கடைந்ததாகவும் காட்சியளிக்கின்றன. இரும்பினால் செய்யப்பட்டிருப்பதால், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் கனமானவை. அவற்றை பக்கவாட்டில் நகர்த்துவதோ அல்லது தூக்குவதோ கடினம். ஆனால், எரிவாயு சிலிண்டர்களின் வடிவத்தில் ஒரு புதிய புரட்சி விரைவில் வரவிருக்கிறது. இனிமேல், மிகவும் இலகுவான எரிவாயு சிலிண்டர்கள் வரவிருக்கின்றன. அவை எடையில் […]

ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தீவிரம் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புட்காம் மாவட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஸ்ரீநகர், புல்வாமா, ஷோபியான் மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். மேலும் அதிர்வுகள் […]

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லேட்டா பகுதியில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 19 வயது இளம் பெண்ணை தேடி வந்த போலீஸார், ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரை மீட்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் தாயார் நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட […]

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் ஒரு பிஞ்சு குழந்தை மற்றும் தாயையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் நகேஷின் மனைவி மமதாவிற்கு (25) தெரியவந்ததை அடுத்து, குடும்பத்தில் பெரும் புயல் வீசியுள்ளது. […]

புதுச்சேரி அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் சூடுபிடித்துள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக தனது அதிரடி வியூகத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின்’ தலைவரான செந்தில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, செந்திலை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார். திமுக – காங்கிரஸ் கூட்டணி […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உயிர்கொல்லி நோயான புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல், சர்க்கரை நோய் தொடர்பான சில […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன. குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இணையாக, அரசாங்கத்தை வழிநடத்தும் உயர்மட்ட அமைப்புகளின் நிர்வாக செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மத்திய அமைச்சர்களின் ஊதியம் மற்றும் படிகளுக்காக இந்த முறை நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் 483.54 கோடி ரூபாயாக இருந்த இந்த ஒதுக்கீடு, தற்போது 620 கோடி ரூபாயாக […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட், தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கு புதிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய மெகா அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்புகள் தமிழகத்திற்கு ஓரளவுக்குக் கைகொடுத்துள்ளன. குறிப்பாகப் போக்குவரத்து, கனிம வளம் மற்றும் தொல்லியல் துறைகளில் தமிழகம் இந்த முறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. […]

மத்திய பட்ஜெட் 2026-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள ஒரு முக்கிய அம்சம், விபத்தினால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ள பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயங்களால் (MACT) வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு, இனி வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பொதுவாக, ஒரு விபத்து நடந்தால் அதற்கான இழப்பீடு வந்து சேர பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் […]