அமெரிக்க-ஈரான் போர் எப்போது முடிவடையும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை தொடரும் நிலையில், பெட்ரோலிய வேதிப்பொருட்களைச் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு அரசாங்கம் வியாழக்கிழமை தற்காலிக நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது. உலகளாவிய விநியோகச் சங்கிலி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், முக்கியமான பெட்ரோலிய வேதிப்பொருட்களின் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், இறுதிப் பொருட்களின் நுகர்வோருக்கும் இந்த நடவடிக்கை நிவாரணம் அளிக்கும். ஜூன் 30 வரை […]

அமெரிக்கா ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவில் “போர் லாக்டவுன்” அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை போல வடிவமைக்கப்பட்ட அந்த செய்தியில், இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதனால் பல சமூக ஊடக பயனர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட எந்த லாக்டவுன் அறிவிப்பையும் எந்த மத்திய அரசு வெளியிடவில்லை.. அந்த தகவல் முழுவதும் போலியானது. […]

மேற்கு ஆசியப் போரின் தாக்கத்தினால், நாட்டில் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. இந்நிலையில், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுடன் சேர்த்து, எரிவாயு விலைகளும் உயரும் என்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.. இது மக்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல், […]

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரை தாண்டி விற்பனையாகிறது.. இந்த சூழலில் ஷெல் இந்தியா (Shell India) நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ஷெல் நிறுவனம் தனது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.41 உயர்த்தியுள்ளது. சாதாரண வகை பெட்ரோல் இப்போது ரூ. 119.85-க்கும், ‘பவர்’ (Power) வகை பெட்ரோல் […]

ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, காந்தர்பால் மாவட்டத்தின் அர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையைத் தொடர்கின்றன. இந்தக் கூட்டு நடவடிக்கையை இந்திய ராணுவத்தின் இரண்டு அசாம் படைப்பிரிவுகள், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. […]