ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்யக் கோரி விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்ட உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது. பொங்கல் நாள் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். இதில் மதுரையில்தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் இந்த போட்டிகளில்பங்கேற்கின்றனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படுகின்றன. கடநத 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தெற்கு மிசோரமின் ஹனாதியால் மாவட்டத்தில் மவ்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நேற்று 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குவாரியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில், ஒரு தொழிலாளி தப்பி ஓடிய நிலையில், 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை […]
கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். டெல்லி காஜியாபாத் என்ற நகரத்தில் வசிப்பவர் சவிதா. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரின் கணவர் சந்திர வீர்-ஐ அவரின் சகோதரர் கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்திருந்தார் சவிதா. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், எவ்வித துப்பும் துலங்காமல் இருந்தது. சமீபத்தில் இவ்வழக்கில் போலீஸாருக்கு […]
தெலங்கானா மாநில பகுதியில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானம் ஒன்றை ஓட்டலாக மாற்றி மக்களை ஈர்க்க முடிவு செய்தார். இதனை தொடர்ந்து கொச்சியில் ஒரு பழைய விமானம் வாங்கி அதனை ராட்சத லாரியில் வைத்து ஹைதரபாத்திற்கு கொண்டு வந்துள்ளார். லாரியின் வழியாக கொண்டு வரப்பட்ட நிலையில் விமானம் மேதரமெட்லா பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழே அடியில் மாட்டிக்கொண்டது. மேலும் இந்த நிகழ்ச்சியை, அப்பகுதி மக்கள் வீடியோவாக […]
மாங்காடு பகுதியில் உள்ள மூகாம்பிகை நகரில் கோவிந்தராஜ் (45) என்பவர் கூலி வேலை செய்பவர். இவர் தன்னுடைய மனைவி உமாராணி மற்றும் 16 வயதில் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் மனைவி மாங்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில், பிரேத பரிசோதனையில் […]
ஆதார் என்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடையாள எண்ணாக மாறிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிலும் அது அமல்படுத்தப்பட்டது. ஆதார் எண்ணை முதலில் வாங்குவது சற்றே கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனையடுத்து, ஆதார் […]
26 வயதான ஷ்ரதாவின் கொடூரமான கொலை டெல்லி தலைநகரை முழுவதுமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கு ஊடகங்களில் வெளியானதையடுத்து, இச்சம்பவம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய செய்தியில், கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் அமீன் பூனவல்லா, தனது Live in Realation பார்ட்னர் ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, இரத்தத்தை சுத்தம் செய்யும் முறையை கூகிள் செய்து மனித உடற்கூறியல் பற்றி படித்ததாக […]
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த தெலுங்கு நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. […]
மாநில அரசுகள் ஒத்துழைத்தால் பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரத் தயார் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அப்படி கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் ரூ.30 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி சென்னையில் விற்பனையாகி வந்தாலும், அதற்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து வந்தது. இது […]
மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளதாகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நிலைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத போது மாணவர்கள் சோர்வடைய கூடாது. ஒரே சிந்தனையோடு […]