மகாராஷ்டிரா மாநில பகுதியில் 36 வயது பெண் ஒருவர் அவரது உறவினரான 28 வயது வாலிபரை காதலித்து வந்த நிலையில், தன்னுடைய 15 வயது மகளை கட்டாயப்படுத்தி அந்த நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அதற்கு மறுப்பு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணத்திற்கு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்துள்ளனர். சென்ற நவம்பர் 6 ஆம் நாள் […]

பிரபல திரைப்பட இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். அவருக்கு வயது 81. அமிதாப் பச்சனின் சூப்பர் ஹிட் படமான Yaarana மற்றும் Mr. Natwarlal போன்ற படங்களைத் தயாரித்த ராகேஷ் குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இயக்குநர் ராகேஷ் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், தனது 81 வயதில் காலமானார். இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராகேஷ் […]

இறந்து போன தன் தந்தையின் உயிரை திரும்பக் கொண்டு வரும் வினோதமான முயற்சியில், பெண் ஒருவர் 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, கிழக்கு கைலாஷ் பகுதியில் ஒரு பெண்ணின் தந்தையை இறந்து போயுள்ளார். தன் தந்தை மீது பாசம் கொண்ட அப்பெண்ணிடம் ஒருவர், இறந்துபோன தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க புதிதாக பிறந்த குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் […]

திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட இந்தியப் பெண்ணை போலவே மாறியுள்ள ஜெர்மனி பெண், தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் க்யூட்டான வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளார். உலகில் சாதி, மதம், நிறம், பாலினம், மொழி என அனைத்தையும் தகர்த்து மனித சமூகம் தொடர்ந்து இயங்கி தழைத்தோங்க வித்திடும் சிறந்த திறவுகோல் காதல். அதிலும், பல வேறுபாடுகளைக் கடந்து திருமணத்தில் முடியும் காதல்களை மக்கள் என்றுமே கொண்டாடத் தயங்குவதில்லை. அந்த […]

கொள்ளையடிக்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவன் முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜேதுசிங் (47) என்பவர் அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 45 வயதில் மனைவி இருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு, ஜேது சிங் மற்றும் அவரது மனைவி சாப்பிட்டு விட்டு உறங்க சென்றுள்ளனர். அப்போது யாரோ […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Deputy Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.Eதேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் […]

’எனக்கு ஏன் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை’ என பெற்ற தாயையே மகன் கொலை செய்த கொடூரம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநில தலைநகரான போபாலில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 67 வயதான அந்தப் பெண்மணி எப்படி உயிரிழந்தார் என போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. ஓய்வுபெற்ற ஆசிரியையை அவரது மகனே கொலை செய்தது தெரியவந்தவுடன் […]

தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். ஆரம்ப அறிக்கையின்படி, நடுக்கம் கிட்டத்தட்ட 5 வினாடிகள் நீடித்தது. நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது மற்றும் […]

திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்ட செய்தி குறிப்பில்: தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை பெறும் வகையில். மோடி தலைமையிலான அரசு 2024 ஆம் ஆண்டுக்கு முன் இதை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சட்ட […]