பிரதமர் நரேந்திரமோடியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது. அதே போன்ற ஒரு கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட 24 முக்கிய […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ள நிலையில், புனேவை சேர்ந்த விவசாய தம்பதி தக்காளி விற்றே கோடீஸ்வரராகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரும் அவரது மனைவியும் கடந்த 6 ஆண்டுகளாக 14 ஏக்கர் நிலத்தில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தக்காளி விளைச்சலால் ரூ.20 லட்சம் வரை இழப்பை சந்தித்ததாலும், தக்காளி விளைச்சலை கைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தனர். இந்நிலையில், […]
நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்ப்பூரில் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி அவருடைய காதலன் முன்னிலையில், 3 கல்லூரி மாணவர்களால் கொடூரமான முறையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 3 குற்றவாளிகள் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தன்னுடைய சொந்த ஊரான ஜோத்பூரில் நடைபெற்ற […]
வாரத்தின் 6 நாட்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல், எந்தவித சிந்தனையும் இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே சென்று குதூகலமாக இருப்பதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அனைவரின் வாழ்விலும் இந்த வார இறுதி நாள் மகிழ்ச்சியை பதிவு செய்யும் என்று நினைத்த நிலையில், இந்த வார இறுதி நாள் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு மாறாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மகாராஷ்டிரா […]
நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, NAFED மற்றும் NCCF மூலம் செயல்படும் விற்பனை மையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்படும் என்று கர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் புதுடெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அர்ரா போன்ற […]
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி […]
சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேச வனத் துறை, இந்திய வனவிலங்குகள் நிறுவனம் (WII) மற்றும் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிவிங்கிப் புலிகள் தொடர்பான வல்லுநர்கள் ஆகியோருடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூலமாக சிவிங்கிப் புலிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. […]
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]
இந்தியாவின் மேகாலயாவின் மேற்கு காசி மலை பகுதியான நாங்ஸ்டோயின் அருகே 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிக்கையின் படி, நிலநடுக்கம் நேற்று, இரவு 7:23 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கங்கள் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் ஆழமான நிலநடுக்கங்களை விட வலுவாக உணரப்படுகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நேற்று அமெரிக்காவின் […]
நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது சுதந்திர உரிமைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், போதைப்பொருள் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. போதைப்பொருள் 3 ஆண்டுகளுக்கு முன் ரபி பிரகாஷ் என்பவரை கைது செய்து கோராபுட் மாவட்டம், செமிலிகுடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ரவி பிரகாஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் […]