மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படியை 7வது ஊதியக்குழு அறிவித்துள்ளது. இது பற்றி இன்று வெளியான தகவலை பார்க்கலாம். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது வருமானத்துடன் சேர்த்தே வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1 ,2022 ஆம் ஆண்டு […]

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் ஆகஸ்ட் 22ம் தேதி மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக சென்றார்.அ ப்போது அவருக்கு உடல்நலக்குறைவு  ஏற்பட்டதால் உத்தரபிரதேசத்தின் பிரபல மருத்துவமனையான வேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் தனிக்கவனம் செலுத்தி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது 82 வயதாகும் முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மோசமான […]

தவறான மருத்துவ அறிக்கையால் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கல்யாண் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 28 வயதான பெண் ஒருவர், கடந்த 2021 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர் கருவின் வளர்ச்சி சரியில்லை என அறிக்கை கொடுத்துள்ளார். அதனால், அவருக்கு கருச்சிதைவு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை […]

புதுடெல்லி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (Kendriya Vidyalaya) ஒன்றில் 11 வயது மாணவியை பள்ளியின் கழிவறையில் இரண்டு சீனியர் மாணவர்கள், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் காவல்துறையில் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சி. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் […]

பல மாநிலங்களில் பின்பற்றப்படுவது போலவே யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதைத் தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது […]

சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும், பெண் காவலருக்கும் இடையேயான உறவு கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் இருந்தபோது, கணவரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த வாரங்கல் மாவட்டம் சிஐடி அலுவலகத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிபவர் பாலபத்ர ரவி. இவருக்கும் பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெண் காவலரின் […]

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரித்தது. எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை கடந்த அக்டோபர் 1முதல் அதிகரித்து இருக்கிறது. அதன்படி எஸ்பிஐ வங்கியானது […]

ரக ரகமான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து அறிந்திருப்போம். அவ்வாறு விதிகளை மீறுவோர்களை போக்குவரத்து போலீசாரால் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அபராதம் விதிப்பதும் நூதன தண்டனை கொடுப்பதுமாக இருந்து வருகிறது. இருப்பினும் அப்படியான செயல்களின் போது சில குளறுபடிகள் நடக்கும். அப்படியான ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் தற்போது மும்பையில் நிகழ்ந்துள்ளது. அதன்படி, டூ வீலர் வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய வண்டியின் நம்பர் ப்ளேட்டில் உள்ள EJ என்ற எழுத்து FJ ஆக […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,756 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 21 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் WireMan பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]