இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,805 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,069 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கிழக்கு ரயில்வேயில் இருந்து பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. இந்த Apprentice பணிக்கு 3115 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் […]
இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு 40% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக CNG, மற்றும் சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிக்கவும், உரம் தயாரிக்கவும், சிஎன்ஜியாக மாற்றப்பட்டு ஆட்டோமொபைல்களுக்கு சக்தி அளிக்கவும் மற்றும் சமையல் நோக்கங்களுக்காக வீட்டு சமையலறைகளுக்கு குழாய் மூலம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் […]
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செப்டம்பர் […]
நாகூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது;- ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. இந்தியா தனது சொந்த வாழ்க்கையின் மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் […]
வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை, கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் துகாராம். இவர், வகுப்பறையில் உள்ள மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், […]
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஹெலிகாப்டர் பயண சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் என பலரும் அங்கு வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். அதனால், அங்கு வாகன நெரிசல் கடுமையாக இருக்கும். இத்தகைய சூழலில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே சேவை வழங்கும் வகையில், ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக […]
சிம் கார்டு தொடர்பான விதிகளை அரசு மாற்றியுள்ளது. புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் இப்போது புதிய சிம் கார்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. சிம் கார்டு அவர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி 18 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் கார்டுகளை நிறுவனங்கள் விற்க முடியாது. அதே நேரத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஆதார் அல்லது டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஆவணத்துடன் தங்களின் புதிய சிம்மைத் […]
நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன், ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆன ’சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், […]
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 1.64 மில்லியன் பேர் இவரது ‘ஸ்கைலார்டு’ சேனலை சப்ஸ்கிரைப் […]