மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 90. ஒடிஷா முன்னாள் முதல்வர் ஜே.பி பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரது கணவரும், ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான ஜே பி பட்நாயக் 2015ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் […]

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணிகள் தற்போது நேரலை ரயில் நிலை மற்றும் PNR நிலை ஆகியவற்றை வீட்டிலேயே எளிதாகச் சரிபார்க்க முடியும், இதற்காக நீங்கள் ரயில்வே இணையதளத்தை கூட திறக்க வேண்டியதில்லை. IRCTC […]

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதால், ரூ.48,000 வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.. ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய 6 மாதங்களுக்கான அகில […]

நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமித்தது. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகால வாழ்க்கையில், லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் பணியாளர்கள் மற்றும் கருவி நியமனங்கள், […]

இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் […]

சி.பி.எஸ்.இ. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ’சாதிவெறி ’ தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றது குறித்து சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுமற்றும் வழிகாட்டுதல் மற்றும் தேர்வு அமைப்பு வாரியமாக செயல்பட்டுவருகின்றதே தவிற பாடப்புத்தகங்களை வெளியிடுவதில்லை. நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் NCERT என்ற பாடத்திட்டத்தின்படியே 9 முதல் 12ம் வகுப்பு வரை பின்பற்றப்படுகின்றது. மத்திய இடைநிலைக் கல்வி (சி.பி.எஸ்.இ) இது தொடர்பாக டுவிட்டரில் சாதி வெறி என்ற வைரலான கருத்துக்கள் குறித்து […]

சானிடரி நாப்கின்கள் இலவசமாக கேட்ட பெண்ணுக்கு பதில் அளிக்கையில் ’உங்களுக்கு காண்டமும் இலவசமாக வேண்டுமா? ’ என பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஜோத் கவுர் பர்மா என்பவர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உள்ளார். யுனிசெப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி மற்றும் பட்டறையில் […]

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஹவுரா, […]

கேரளாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரைத் தேடி வந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கேரளாவின் ஆற்றிங்கல் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் முதியவர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாக்கோல் அட்டைப் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்துள்ளார். அந்த பெட்டி முழுக்க 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் . எல்லாருக்கும் ஒரு ஆசையிருக்கும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு புதையலோ , ஒரு […]

மேற்குவங்க பாஜக தலைவர் பேசியிருக்கும் கருத்தால், திரிணாமுல் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கிலும், மூத்த தலைவர் அனுப்பிரதா மோந்தல் கால்நடை கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. […]