21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது‌. 21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, 20 முதல் 24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கும் காரணிகளில் […]

அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கிகள் 21 நாட்கள் விடுமுறை இருப்பதால் முன்பே  திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது…. அதே நேரத்தில் 3 நாட்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் விழாக்காலம் தொடங்கிவதால் விடுமுறை நாட்கள் , சனி , ஞாயிறு , பொது விடுமுறை என அனைத்தையும் சேர்த்து 21 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது  குறித்த தகவலை ரிசர்வ் வங்கிவெளியிட்டுள்ளது. அதே போல என்எஸ்இ பங்குச்சந்தை வார […]

திருப்பதி அருகே பென்ஸ் காருடன் டிராக்டர் மோதிய விபத்தில் டிராக்டர் இரண்டு ’பீஸ்’ ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பைபாஸ் சாலையில்இந்த விபத்து ஏற்பட்டது. மேஸ்ஸி ஃபெர்குசன் நிறுவனத்தின் டிராக்டரும் பென்ஸ் காரும் மோதி விபத்திற்குள்ளாது. இந்த விபத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்ற போதிலும் டிராக்டர் ஓட்டுனர் லோசான காயங்களுடன் உயிர்தப்பினர். டிராக்டரும் – பென்ஸும் மோதிக்கொண்ட வேகத்தில் டிராக்டர் இரண்டு துண்டானது.. […]

கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டில் இருந்து வெளியேறிய யானைகளிடம் சிக்கிய இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி உயிர் தப்பினார். கேரளாவில்அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள்வெளியேறி குடியிருப்புபகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது. அப்போது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷாஜி என்பவர் யானையை கவனிக்கவில்லை. […]

உத்தரபிரேத மாநிலத்தில் தவறாக உச்சரித்ததாக கூறி பள்ளி ஆசிரியர் இரும்புக் கம்பியைக் கொண்டு மாணவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்புபள்ளி மாணவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிகித் டோஹ்ரே என்ற அந்த பள்ளி மாணவர் சமூக அறிவியல் பாடத்தில் ஒன்றை வாசித்துக் காட்டும் போது தவறான உச்சரிப்பை பயன்படுத்தியுள்ளளார். இதனால் […]

ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வசிப்பவருக்கு வழங்கப்பட்ட 12 இலக்க, சரிபார்க்கக்கூடிய அடையாள எண் ஆகும். ஆதார் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை UIDAI ஆல் உறுதி செய்யப்பட வேண்டும். நமது கவனக்குறைவால் ஆதார் விவரங்கள் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. நமது ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் உதவிக்குறிப்புகளையும் யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. ஆதார் அட்டை […]

ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ’தாதா சாகேப் பால்கே விருது’ கருதப்படுகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருதினை […]

நாட்டின் உச்சபச்ச நீதி அமைப்பாக உள்ள உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற நடைமுறைகளை 2018ம் ஆண்டு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி தந்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பானது 4 ஆண்டுகள் கழித்து இன்று அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை தொடங்கலாம் என்ற முடிவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,230 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 32 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,255 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் இந்து […]