உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மேட்ரிமோனியல் (Matrimony) தளத்தில் போலி விவரங்களைப் பதிவிட்டு ரூ.1.6 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, மோசடியில் ஈடுபட்ட தம்பதியில், ஆண் ஜார்கண்ட்டைச் சேர்ந்த பப்லு குமார் என்றும், பெண் பீகாரைச் சேர்ந்த பூஜா குமாரி என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள், இருவரும் இந்த மோசடி மூலம் சுமார் 35 பேரை ஏமாற்றி […]

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமணத்தில் ஆதார் அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹாசன்பூரில் நடந்த திருமணத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதே சமயம் திருமணம் முடியும் நிலையில் உணவு சாப்பிடும் அறைக்கு ஏராளமானோர் நுழைந்துள்ளனர். திருமணம் நடத்தியவர்களின் குடும்பத்தினர் பார்க்கும்போது அதில் யார் என்றே முகம் […]

காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிருப்தி தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என 23 தலைவர்கள் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினர். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக […]

உணவு டெலிவரி செய்யும் ’’சோமேட்டோ’’ தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் உணவு டெலிவரி செய்யும் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். டெல்லியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. சனிக்கிழமை இரவு ’’சோமேட்டோ’’-வில் உணவு டெலிவரி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியபோது ’’ நாங்கள் தற்போதைக்கு உணவு ஆன்லைன் டெலிவரி சேவையை வழங்குவதில்லை’’ ’’விரைவில் வருவோம்’’ என்ற வாசகம் பரவத் தொடங்கியது. 3 நாட்கள் ஆகியம் இன்னும் […]

ஜார்கண்டில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவர் முன் சுமார் நான்கு மணி நேரம் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் உள்ள சத்பர்வா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகோரியா-பால்வாஹி கிராமத்திற்கு அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. தனது மாமனார் – மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அப்பெண் சனிக்கிழமை தனது தாய்வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அப்பெண்ணின் மாமியார் […]

வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் உடல் எடையை குறைத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஜிரோதா நிறுவன சிஇஓ அறிவித்துள்ளார். பணியாளர்களுக்கான புதிய உடற்பயிற்சி சவாலை ஆன்லைன் தரகு நிறுவனமான செரோதா அறிமுகப்படுத்தி உள்ளது. வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் ஆரோக்கியம் தொடர்பான நடவடிக்கைகளின் நீண்ட பட்டியலில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நிதின் காமத் கூறுகையில், ”வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமாகவும் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,129 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,688 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று ஸ்வாதி பாலிவால் கூறினார். டெல்லியில் பெண்கள் ஒருபுறம் இருக்க, ஆண் குழந்தைகளுக்கு […]

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து நவம்பர் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38%ஆக உயரும்.. […]

சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பேசி வருகின்றார். அதில் இன்று பேசியபோது செப்டம்பர் 28ம் தேதி வீரர் பகத்சிங்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்தில் பகத்சிங் விமான நிலையம் என பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார். […]