தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் தீவிரவாத செயலுக்கு பயிற்சி முகாம் நடத்துவதாகவும், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்க முயற்சிபதாகவும் கடந்த மாதம் ஜூலை நான்காம் தேதி அப்துல் காதர், ஷேக் ஷகதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் முபின் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பிறகு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கை மறுபதிவு செய்த […]

உத்தரபிரதேச மாநில காவல்துறையை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழாவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டிற்கு மட்டுமின்றி, உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. 2017-ஆம் வருடத்திற்கு முன்பு வன்முறை, அராஜகம் மற்றும் போக்கிரித்தனம் பற்றி விவாதிக்க மக்கள் உத்தரபிரதேசத்தை உதாரணமாக பார்த்தனர். ஆனால், தற்போது மாநிலத்தில் சட்டம் […]

டெல்லி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனதுல்லா கானின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சோதனை செய்ய சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை அமனதுல்லா கானின் வீட்டில் இருந்தவர்கள் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. வக்பு வாரிய வழக்கு தொடர்பாக ஜாமியா நகரில் இருக்கும் அமனதுல்லா கானின் வீட்டில் சோதனை செய்ய போன போது, எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகாரியை தாக்கியதாக, வீடியோ ஆதாரங்களுடன் கோர்ட்டில் தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து […]

கர்நாடக  மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா , அவருடைய மகன் , எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா வக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு வளர்ச்சி ஆணையம் குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கினார். இதற்காக எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் புகார் […]

சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதால், சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதியில் தங்கி படிக்கும் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை சிம்லாவில் உள்ள அவரது காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானதால், அதிர்ச்சியடைந்த மாணவிகள் இரவு பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் போராட்டத்தில் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,664 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 35 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,555 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Finance,MCA, MBA போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 3 […]